ETV Bharat / city

பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்: இரண்டு தரப்பினர் மீது  வழக்குப்பதிவு! - Police inquired

சேலம்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்தில், இரு தரப்பினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Activist Piyush Manush attacked case, Police inquired
author img

By

Published : Aug 29, 2019, 5:19 PM IST

சமூக ஆர்வலர் பியுஷ் மானுஷ் மற்றும் பாஜகவினருக்கு இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பொருளாதார சீர்திருத்தம், காஷ்மீர் விவகாரம் குறித்து நேரில் விவாதிப்பதற்காக பாஜக அலுவலகத்திற்கு நேரில் வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பியுஷ் மானுஷ் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பியுஷ் மானுஷ் சேலம் மாவட்டத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்று அக்கட்சியினரை சந்தித்து கேள்விகளை கேட்டார். அதனை முகநூலில் நேரலையில் பதிவும் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பாஜகவினரும் அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

அப்போது பியுஷ் மானுஷுக்கு செருப்பு மாலை அணிவித்து பாஜகவினர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர், அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்!

இது குறித்து சேலம் மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பியுஷ் மானுஷ் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.

அதே போன்று பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பத்துபேர் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமூக ஆர்வலர் பியுஷ் மானுஷ் மற்றும் பாஜகவினருக்கு இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பொருளாதார சீர்திருத்தம், காஷ்மீர் விவகாரம் குறித்து நேரில் விவாதிப்பதற்காக பாஜக அலுவலகத்திற்கு நேரில் வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பியுஷ் மானுஷ் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பியுஷ் மானுஷ் சேலம் மாவட்டத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்று அக்கட்சியினரை சந்தித்து கேள்விகளை கேட்டார். அதனை முகநூலில் நேரலையில் பதிவும் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பாஜகவினரும் அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

அப்போது பியுஷ் மானுஷுக்கு செருப்பு மாலை அணிவித்து பாஜகவினர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர், அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்!

இது குறித்து சேலம் மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பியுஷ் மானுஷ் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.

அதே போன்று பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பத்துபேர் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Intro:சமூக ஆர்வலர் தாக்குதல் சம்பவம் இரண்டு தரப்பினர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு.Body:
சேலத்தைச் சேர்ந்தவர்
பியூஸ் மானுஷ் .
சமூக ஆர்வலர் .

இவர் சேலம் மரவனேரி சாலை பகுதியில் உள்ள சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு நேற்று மாலை 5 மணியில் வந்தார் .

முன்னதாக அவர்
பேஸ்புக்கில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சிலர் அமர்ந்திருந்தனர்.

சரியாக 5 மணிக்கு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு பியூஸ் மானுஷ் சென்றார் .

பின்னர் அங்கிருந்த நிர்வாகிகளிடம் காஷ்மீர் பிரச்சினை குறித்தும், புதிய பொருளாதாரக் கொள்கை குறித்தும் அங்கு அமர்ந்திருந்த நிர்வாகிகள் தொண்டர்களிடம் விவாதித்து விளக்கம் கேட்டார் .

அப்போது பியூஸ் மானுசுக்கும் , அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்னர் இரண்டு தரப்பினரும் தள்ளுமுள்ளு செய்துகொண்டனர்.
இந்த நிலையில் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டார். அப்போது அவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது .

இதை அறிந்த அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர்கள் உடனே அங்கு விரைந்து வந்து பியூஸ் மானுசை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர் .பின்னர் பியூஸ் மானுஷ் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார் .

அங்கு தன்னை பாரதிய ஜனதா நிர்வாகிகள் தொண்டர்கள் சரமாரியாக தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்து போலீசில் புகார் செய்தார் .

இதன்பேரில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர்
செந்தில் குமாரை சந்தித்து தங்களது கட்சி அலுவலகத்திற்குள் பியூஸ் மானுஷ் வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் , இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் செய்தனர் .

இதன் பேரில் விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்இதையடுத்து அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் விசாரித்தார்.

பின்னர் பியூஸ் மானுஷ் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல், மற்றும் ரத்தக்கறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுபோல சேலம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது இவர்கள் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் ,
தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
வழக்கு பதிவு செய்யப்பட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் தொண்டர்கள் யார் அந்த பத்து பேர் என காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.

இந்த மோதலால் தற்போது பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் துறையினர் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.