மதுரையில் உள்ள அரசு இராசாசி மருத்துவமனையில் விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றுவரை 90 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கூடுதலாக ஒருவர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போதுவரை மொத்தம் 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 43 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட அல்லது பரிசோதனைக்கு வருகின்ற நோயாளிகளை தவிர அதிக நபர்கள் வருவதை தடுக்க அந்த மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையும் மதுரை மாநகராட்சியும் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
மதுரையில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 10 ஆயிரத்து 830 வழக்குகள் பதிவு