ETV Bharat / city

ரூ.11 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கீடு - சு. வெங்கடேசன் கண்டனம்

author img

By

Published : Feb 4, 2021, 5:53 PM IST

மதுரை: தமிழ்நாடு ரயில்வே துறைக்கான வளர்ச்சித் திட்டங்கள் மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. ரூ. 11 ஆயிரம் கோடி தேவைான திட்டத்துக்கு வெறும் ரூ. 95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

madurai constituency mp su venkatesan
மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு. வெங்கடேசன்

இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்பி இன்று (பிப். 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 11 புதிய லைன் திட்டங்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது வெறும் ரூ. 95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுவும் ரூ. 208 கோடி தேவைப்படுகிற ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்துக்கு 75 கோடியும், மதுரை - அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கான புதிய பாதை திட்டத்தில் ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு வெறும் ரூ. 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு

மற்ற திட்டங்களான திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; அத்திப்பட்டு - புத்தூர்; ஈரோடு - பழனி ;சென்னை- மகாபலிபுரம் - கடலூர்; கூடுவாஞ்சேரி - திருப்பெரும்புதூர்; மொரப்பூர் - தர்மபுரி; காரைக்கால் - பேரளம்; சின்னசேலம் - கள்ளக்குறிச்சி; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு தேவைப்படுகிற ரூ. 10 ஆயிரம் கோடிக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இதேபோல புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது. நான் அதனை வன்மையாக கண்டித்தேன். அது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்தேன். ஆனாலும் இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

  • தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு
    11 ஆயிரம் கோடி தேவை. ஒதுக்கப்பட்டுள்ளதோ வெறும் 95 கோடி மட்டுமே.
    இன்று வெளியிடப்படுள்ள பிங்க் அறிக்கையில் உள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. எனது வன்மையான கண்டனங்கள் . போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் . #RailwayBudget2021 pic.twitter.com/3zaOnTwYdI

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) February 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்ற ஆண்டு நான் இதை விமர்சித்த போது ரயில்வே நிர்வாகம் தாங்கள் காட்பாடி - விழுப்புரம்; கரூர் - சேலம் - திண்டுக்கல்; கரூர்- ஈரோடு; சென்னை கடற்கரை - எழும்பூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்கள் மின் மையத்துடன் கூடியதாக இந்த பட்ஜெட்டில் இணைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த நாலு திட்டத்துக்கும் கூட தலா வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கி இருப்பதை அப்போது சுட்டிக் காட்டினேன்.

ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் இந்த நான்கு திட்டங்களில் காட்பாடி - விழுப்புரம் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 600 கோடி தேவைப்படும்போது, ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய்.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்

கரூர் - சேலம் - திண்டுக்கல் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 600 கோடி தேவை, கரூர் - ஈரோடு திட்டத்துக்கு தேவை ரூ. 650 கோடி. ஆனால் இவற்றுக்கு ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய்.

பீச் திட்டத்துக்கு 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 779 கோடி ரூபாய்க்கு, ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத் திட்டங்கள் நடைமுறையில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களாக மாறியுள்ளன.

வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு

இதனால் தமிழ்நாடு வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி மின்மயத்துடன் கூடிய இரட்டைப் பாதை திட்டம். அதைப்போல வாஞ்சி மணியாச்சியிலிருந்து நாகர்கோயில்; திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு என்று மூன்று திட்டங்களுக்கும் மீதி ரூ. 3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெறும் ரூ. 775 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் 2017இல் அறிவித்தபோது 2022இல் முடியும் என்று மத்திய அமைச்சரவை கூறியது. ஆனால் இப்போதைய நிலைமையில் 2025இல் கூட இந்தத் திட்டம் முடிவடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இத்திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோருகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 50 குழந்தைகள் உள்ள பழங்குடியின கிராமம்: அங்கன்வாடி அமைத்து தரக் கோரிக்கை!

இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்பி இன்று (பிப். 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 11 புதிய லைன் திட்டங்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது வெறும் ரூ. 95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுவும் ரூ. 208 கோடி தேவைப்படுகிற ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்துக்கு 75 கோடியும், மதுரை - அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கான புதிய பாதை திட்டத்தில் ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு வெறும் ரூ. 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு

மற்ற திட்டங்களான திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; அத்திப்பட்டு - புத்தூர்; ஈரோடு - பழனி ;சென்னை- மகாபலிபுரம் - கடலூர்; கூடுவாஞ்சேரி - திருப்பெரும்புதூர்; மொரப்பூர் - தர்மபுரி; காரைக்கால் - பேரளம்; சின்னசேலம் - கள்ளக்குறிச்சி; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு தேவைப்படுகிற ரூ. 10 ஆயிரம் கோடிக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இதேபோல புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது. நான் அதனை வன்மையாக கண்டித்தேன். அது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்தேன். ஆனாலும் இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

  • தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு
    11 ஆயிரம் கோடி தேவை. ஒதுக்கப்பட்டுள்ளதோ வெறும் 95 கோடி மட்டுமே.
    இன்று வெளியிடப்படுள்ள பிங்க் அறிக்கையில் உள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. எனது வன்மையான கண்டனங்கள் . போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் . #RailwayBudget2021 pic.twitter.com/3zaOnTwYdI

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) February 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்ற ஆண்டு நான் இதை விமர்சித்த போது ரயில்வே நிர்வாகம் தாங்கள் காட்பாடி - விழுப்புரம்; கரூர் - சேலம் - திண்டுக்கல்; கரூர்- ஈரோடு; சென்னை கடற்கரை - எழும்பூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்கள் மின் மையத்துடன் கூடியதாக இந்த பட்ஜெட்டில் இணைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த நாலு திட்டத்துக்கும் கூட தலா வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கி இருப்பதை அப்போது சுட்டிக் காட்டினேன்.

ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் இந்த நான்கு திட்டங்களில் காட்பாடி - விழுப்புரம் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 600 கோடி தேவைப்படும்போது, ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய்.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்

கரூர் - சேலம் - திண்டுக்கல் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 600 கோடி தேவை, கரூர் - ஈரோடு திட்டத்துக்கு தேவை ரூ. 650 கோடி. ஆனால் இவற்றுக்கு ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய்.

பீச் திட்டத்துக்கு 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 779 கோடி ரூபாய்க்கு, ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத் திட்டங்கள் நடைமுறையில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களாக மாறியுள்ளன.

வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு

இதனால் தமிழ்நாடு வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி மின்மயத்துடன் கூடிய இரட்டைப் பாதை திட்டம். அதைப்போல வாஞ்சி மணியாச்சியிலிருந்து நாகர்கோயில்; திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு என்று மூன்று திட்டங்களுக்கும் மீதி ரூ. 3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெறும் ரூ. 775 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் 2017இல் அறிவித்தபோது 2022இல் முடியும் என்று மத்திய அமைச்சரவை கூறியது. ஆனால் இப்போதைய நிலைமையில் 2025இல் கூட இந்தத் திட்டம் முடிவடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இத்திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோருகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 50 குழந்தைகள் உள்ள பழங்குடியின கிராமம்: அங்கன்வாடி அமைத்து தரக் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.