ETV Bharat / city

ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையத்திற்கு இந்தியில் பெயர் எதற்கு? - எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி!

author img

By

Published : Aug 2, 2022, 9:39 PM IST

ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையத்தின் பெயரை இந்தியில் மாற்றம் செய்து மத்திய ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இந்த திடீர் மாற்றம் எதற்கு? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

railway
railway

மதுரை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எல்லா ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களுக்கும் இந்தியில் "சக்யோக்" என்று பெயரிட வேண்டும் என அனைத்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் ஆணையை அனுப்பியுள்ளது.

இந்த திடீர் மாற்றம் எதற்காக என்று புரியவில்லை. ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களின் பெயர், அவரவர் தாய் மொழியில் இருந்தால்தான் பயணிகள் எளிதாக சேவைகளைப்பெற முடியும். இந்தியாவில் இன்றும் 22 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர். இந்த நிலையில், மக்கள் அந்நியமாக உணரும் வகையில் வேறு மொழியை திணிப்பது அநியாயம் அல்லவா? இது மக்களை இன்னலுக்கு ஆளாக்காதா? பல பயணிகள் கடைசி நிமிடத்தில்தான் இதுபோன்ற சேவைகளை அணுக முற்படுவார்கள், அவர்களை சிரமத்திற்கு ஆளாக்கலாமா?

இதுபோன்ற நடைமுறைப் பிரச்னைகளைக்கடந்து, இந்த முடிவு அலுவல்மொழி விதிகள் 1976ஐ மீறக் கூடியதாகும். அலுவல் மொழி விதிகளின் முதல் பகுதி பிரிவு 2ல், 'இவ்விதிகள் தமிழ்நாடு மாநிலம் தவிர இந்தியா முழுமைக்கும் பொருந்தும்' என்கிறது.

இந்த விதிகளில் மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில் கூட, எங்கு தகவல் தொடர்புகள் 'இந்தியில் கட்டாயம் இருக்க வேண்டும்' அல்லது 'இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்' அல்லது 'ஆங்கிலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்' என்று முறையே மண்டலங்கள் ஏ, பி, சி என வகைப்படுத்தி விதிகளை வகுத்துள்ளன.

ஆனால், ரயில்வே வாரியமோ விசாரணை மையத்தின் பெயர் "சக்யோக்" என்று கட்டாயமாக (should modify)மாற்றப்பட வேண்டும் என்கிறது. அலுவல் மொழி விதிகள் 1976 என்பது விடுதலைக்குப் பிந்தைய 20 ஆண்டுகள் ஆழமான விவாதங்களுக்குப்பிறகு உருவானது. மொழிப் பன்மைத்துவம் காக்கப் பல வெகுஜனப்போராட்டங்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த பின்னணியிலும் உருவாக்கப்பட்ட ஒன்று.

ஆகவே, ரயில்வே வாரியம் இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும். ரயில் நிலையங்களில் எல்லா தகவல் பலகைகளும் மாநில மொழிகளில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிற்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பரந்தூர் விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்!

மதுரை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எல்லா ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களுக்கும் இந்தியில் "சக்யோக்" என்று பெயரிட வேண்டும் என அனைத்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் ஆணையை அனுப்பியுள்ளது.

இந்த திடீர் மாற்றம் எதற்காக என்று புரியவில்லை. ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களின் பெயர், அவரவர் தாய் மொழியில் இருந்தால்தான் பயணிகள் எளிதாக சேவைகளைப்பெற முடியும். இந்தியாவில் இன்றும் 22 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர். இந்த நிலையில், மக்கள் அந்நியமாக உணரும் வகையில் வேறு மொழியை திணிப்பது அநியாயம் அல்லவா? இது மக்களை இன்னலுக்கு ஆளாக்காதா? பல பயணிகள் கடைசி நிமிடத்தில்தான் இதுபோன்ற சேவைகளை அணுக முற்படுவார்கள், அவர்களை சிரமத்திற்கு ஆளாக்கலாமா?

இதுபோன்ற நடைமுறைப் பிரச்னைகளைக்கடந்து, இந்த முடிவு அலுவல்மொழி விதிகள் 1976ஐ மீறக் கூடியதாகும். அலுவல் மொழி விதிகளின் முதல் பகுதி பிரிவு 2ல், 'இவ்விதிகள் தமிழ்நாடு மாநிலம் தவிர இந்தியா முழுமைக்கும் பொருந்தும்' என்கிறது.

இந்த விதிகளில் மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில் கூட, எங்கு தகவல் தொடர்புகள் 'இந்தியில் கட்டாயம் இருக்க வேண்டும்' அல்லது 'இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்' அல்லது 'ஆங்கிலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்' என்று முறையே மண்டலங்கள் ஏ, பி, சி என வகைப்படுத்தி விதிகளை வகுத்துள்ளன.

ஆனால், ரயில்வே வாரியமோ விசாரணை மையத்தின் பெயர் "சக்யோக்" என்று கட்டாயமாக (should modify)மாற்றப்பட வேண்டும் என்கிறது. அலுவல் மொழி விதிகள் 1976 என்பது விடுதலைக்குப் பிந்தைய 20 ஆண்டுகள் ஆழமான விவாதங்களுக்குப்பிறகு உருவானது. மொழிப் பன்மைத்துவம் காக்கப் பல வெகுஜனப்போராட்டங்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த பின்னணியிலும் உருவாக்கப்பட்ட ஒன்று.

ஆகவே, ரயில்வே வாரியம் இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும். ரயில் நிலையங்களில் எல்லா தகவல் பலகைகளும் மாநில மொழிகளில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிற்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பரந்தூர் விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.