ETV Bharat / city

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால்..? - ஓ. பன்னீர்செல்வம்

author img

By

Published : Dec 17, 2021, 9:47 PM IST

திமுக அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுமானால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் காலம் விரைவில் உருவாகும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

மதுரை: தேனி மாவட்ட அதிமுக சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள பயணியர் விடுதியின் முன்பாக இன்று(டிச.17) திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் கம்பம் எம்.எல்‌.ஏ.ஜக்கையன் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது கண்டன உரையாற்றிய ஓ.பி.எஸ் பேசுகையில், 'அடிப்படை உறுப்பினர்களால் தான் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி‌.ஆரின் கனவு நிறைவேறியுள்ளது.

தற்போதைய தலைமை இன்றைக்கு எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளின் அடிப்படையில் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுக

எம்‌.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாவின் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் செய்து தரப்பட்டன. அதன் காரணமாக தான் தமிழ்நாட்டில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை அமைத்தது.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

கொடிய நோயான கரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைந்தன. அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்காக 505 வாக்குறுதிகளை கொடுத்து, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.

தமிழ்நாட்டின் நீர் ஆதாரப் பிரச்னையான காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடான அணைகளில் தமிழ்நாட்டிற்கு உரிமை கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர், ஜெயலலிதா. ஆனால், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது, திமுக அரசு.

அதற்கு உதாரணம் தான் அண்மையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தாமல் விட்டுக் கொடுத்தது. தமிழ்நாட்டின் உரிமையை மீட்டெடுக்க அதிமுக போராட்டம் நடத்தியதால் தான் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 4 முறை 142 அடியாக உயர்த்தப்பட்டது.

விலைவாசியைக் குறைக்காத திமுக

ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம், நீட் தேர்வை ரத்து செய்வோம், துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 5,000 நிவாரணம் வழங்குவோம் என சொல்லி வாக்கு சேகரித்தனர்.‌ பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தும், அதனைக் குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.‌ போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குத் தகுந்த சீருடைகள் வழங்காமல் உள்ளன.

'அரசு ஊழியர்கள் எங்கள் நண்பன்' எனச் சொல்லி வாக்கு வாங்கிய திமுக அரசு, தற்போது அவர்களை ஏமாற்றி வருகிறது. எனவே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து விரைவில் போராடுவார்கள். மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும்’ என்றார்.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

மதுரை: தேனி மாவட்ட அதிமுக சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள பயணியர் விடுதியின் முன்பாக இன்று(டிச.17) திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் கம்பம் எம்.எல்‌.ஏ.ஜக்கையன் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது கண்டன உரையாற்றிய ஓ.பி.எஸ் பேசுகையில், 'அடிப்படை உறுப்பினர்களால் தான் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி‌.ஆரின் கனவு நிறைவேறியுள்ளது.

தற்போதைய தலைமை இன்றைக்கு எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளின் அடிப்படையில் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுக

எம்‌.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாவின் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் செய்து தரப்பட்டன. அதன் காரணமாக தான் தமிழ்நாட்டில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை அமைத்தது.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

கொடிய நோயான கரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைந்தன. அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்காக 505 வாக்குறுதிகளை கொடுத்து, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.

தமிழ்நாட்டின் நீர் ஆதாரப் பிரச்னையான காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடான அணைகளில் தமிழ்நாட்டிற்கு உரிமை கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர், ஜெயலலிதா. ஆனால், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது, திமுக அரசு.

அதற்கு உதாரணம் தான் அண்மையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தாமல் விட்டுக் கொடுத்தது. தமிழ்நாட்டின் உரிமையை மீட்டெடுக்க அதிமுக போராட்டம் நடத்தியதால் தான் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 4 முறை 142 அடியாக உயர்த்தப்பட்டது.

விலைவாசியைக் குறைக்காத திமுக

ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம், நீட் தேர்வை ரத்து செய்வோம், துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 5,000 நிவாரணம் வழங்குவோம் என சொல்லி வாக்கு சேகரித்தனர்.‌ பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தும், அதனைக் குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.‌ போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குத் தகுந்த சீருடைகள் வழங்காமல் உள்ளன.

'அரசு ஊழியர்கள் எங்கள் நண்பன்' எனச் சொல்லி வாக்கு வாங்கிய திமுக அரசு, தற்போது அவர்களை ஏமாற்றி வருகிறது. எனவே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து விரைவில் போராடுவார்கள். மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும்’ என்றார்.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.