ETV Bharat / city

“விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது” - சு.வெங்கடேசன்

author img

By

Published : Dec 16, 2020, 10:07 PM IST

மதுரை : டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

It is reprehensible to slander that extremists have infiltrated the farmers struggle
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது.

கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 21 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றுவருவதால் இந்திய அரசின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக வழிநடத்த காலிஸ்தான் அமைப்பும், மாவோயிஸ்ட் அமைப்பும் முயல்கிறது என்றும் பாகிஸ்தான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பாஜக தலைவர்களின் இந்த கருத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு

மதுரை முனிச்சாலை பகுதியில் ஐக்கிய ஜமாத் சார்பில் இன்று (டிச.16) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய சு.வெங்கடேசன், “விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் மாவோயிஸ்ட்களும் வழிநடத்துகின்றனர் என்று போராடுவோர் அனைவரும் தேச விரோதிகள் என்றும் மத்திய அரசும், பாஜக தலைவர்களும் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அமைச்சர்கள் கூறியிருப்பது வேதனைத் தரக் கூடிய செய்தி. அதுமட்டுமல்ல போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேச பக்தி கொண்டு நாட்டின் நலனை காக்கவே விவசாயிகள் போராடி வருகின்றனர்” என்றார்.

இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : 2021ஆம் ஆண்டுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது.

கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 21 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றுவருவதால் இந்திய அரசின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக வழிநடத்த காலிஸ்தான் அமைப்பும், மாவோயிஸ்ட் அமைப்பும் முயல்கிறது என்றும் பாகிஸ்தான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பாஜக தலைவர்களின் இந்த கருத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு

மதுரை முனிச்சாலை பகுதியில் ஐக்கிய ஜமாத் சார்பில் இன்று (டிச.16) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய சு.வெங்கடேசன், “விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் மாவோயிஸ்ட்களும் வழிநடத்துகின்றனர் என்று போராடுவோர் அனைவரும் தேச விரோதிகள் என்றும் மத்திய அரசும், பாஜக தலைவர்களும் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அமைச்சர்கள் கூறியிருப்பது வேதனைத் தரக் கூடிய செய்தி. அதுமட்டுமல்ல போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேச பக்தி கொண்டு நாட்டின் நலனை காக்கவே விவசாயிகள் போராடி வருகின்றனர்” என்றார்.

இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : 2021ஆம் ஆண்டுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.