ETV Bharat / city

'ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் எந்த பலனையும் தராது' - ஆர்.பி உதயக்குமார்

author img

By

Published : Jan 25, 2020, 8:22 AM IST

மதுரை: "எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டம் என்பது எந்த பலனையும் பெற்றுத்தராது" என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் பேசியுள்ளார்.

R P Udayakumar byte in Thirumangalam
R P Udayakumar byte in Thirumangalam

மதுரை திருமங்கலம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஸ்டாலின் பல்வேறு வழிகளில் போராடியும் அவையெல்லாம் பொய்த்துப் போனதால் கடைசியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். அவர், முன்னதாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் சுயநலத்தோடு இருந்ததால் தான் மக்கள் அதற்கு தோல்வியை பரிசாகக் கொடுத்தார்கள். இதற்கும் தோல்வியே பரிசாக கிடைக்கும். அவர் முதலமைச்சர் பதவி மீது வைத்திருக்கின்ற மோகம், ஆசை காரணமாகவே தமிழ்நாட்டை போராட்டக் களமாக மாற்ற நினைக்கிறார்" என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறார். பல்வேறு துறைகளில் விருதுகளுக்கு மேல் விருதுகளை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஸ்டாலின் மக்களிடம் கதை சொல்லிப் பார்த்தார், வசனம் பேசி பார்த்தார், கடிதம் எழுதிப் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே வீதிக்கு வந்து போராடி பார்க்கிறார். அதிலும் அவருக்கு பலன் கிடைக்காது. எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டம் என்பது எந்த ஒரு வினையையும், எந்த பலனையும் பெற்றுத்தராது" என்று தெரிவித்தார்.

திருமங்கலத்தில் ஆர்பி உதயக்குமார் பேட்டி

மேலும், "திமுகவினர் சிறுபான்மை மக்களிடம் பொய் பரப்புரை செய்து விஷ விதைகளை விதைத்து விட்டார்கள். அதற்கு உரிய விளக்கம் கொடுத்து தான் அவர்களுக்கு உண்மையை சொல்லவேண்டும். அதிமுக சிறும்பான்மை மக்களுக்கு சிறு தீங்கும் அளித்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மிகப்பெரிய திட்டம். தற்போது இந்த திட்டத்திற்கான சாலைகள் மேம்படுத்தும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது மதுரைக்கு பெருமை சேர்க்கும் வானளாவிய எய்ம்ஸ் மருத்துவமனையாக அமையும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:

சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

மதுரை திருமங்கலம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஸ்டாலின் பல்வேறு வழிகளில் போராடியும் அவையெல்லாம் பொய்த்துப் போனதால் கடைசியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். அவர், முன்னதாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் சுயநலத்தோடு இருந்ததால் தான் மக்கள் அதற்கு தோல்வியை பரிசாகக் கொடுத்தார்கள். இதற்கும் தோல்வியே பரிசாக கிடைக்கும். அவர் முதலமைச்சர் பதவி மீது வைத்திருக்கின்ற மோகம், ஆசை காரணமாகவே தமிழ்நாட்டை போராட்டக் களமாக மாற்ற நினைக்கிறார்" என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறார். பல்வேறு துறைகளில் விருதுகளுக்கு மேல் விருதுகளை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஸ்டாலின் மக்களிடம் கதை சொல்லிப் பார்த்தார், வசனம் பேசி பார்த்தார், கடிதம் எழுதிப் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே வீதிக்கு வந்து போராடி பார்க்கிறார். அதிலும் அவருக்கு பலன் கிடைக்காது. எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டம் என்பது எந்த ஒரு வினையையும், எந்த பலனையும் பெற்றுத்தராது" என்று தெரிவித்தார்.

திருமங்கலத்தில் ஆர்பி உதயக்குமார் பேட்டி

மேலும், "திமுகவினர் சிறுபான்மை மக்களிடம் பொய் பரப்புரை செய்து விஷ விதைகளை விதைத்து விட்டார்கள். அதற்கு உரிய விளக்கம் கொடுத்து தான் அவர்களுக்கு உண்மையை சொல்லவேண்டும். அதிமுக சிறும்பான்மை மக்களுக்கு சிறு தீங்கும் அளித்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மிகப்பெரிய திட்டம். தற்போது இந்த திட்டத்திற்கான சாலைகள் மேம்படுத்தும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது மதுரைக்கு பெருமை சேர்க்கும் வானளாவிய எய்ம்ஸ் மருத்துவமனையாக அமையும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:

சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

Intro:*எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டம் என்பது எந்த ஒரு வினையையும், எந்த பலனையும் பெற்றுத்தராது - வருவாய்த்துறை அமைச்சர் R B உதயகுமார் பேட்டி*Body:*எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டம் என்பது எந்த ஒரு வினையையும், எந்த பலனையும் பெற்றுத்தராது - வருவாய்த்துறை அமைச்சர் R B உதயகுமார் பேட்டி*

மதுரை திருமங்கலம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

*தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாவது;*

பல்வேறு வழிகளில் போராடியும் பொய்த்து போனதின் காரணத்தினால் கடைசியாக குடியுரிமை திருத்தச்சட்டத்தை கையில் எடுத்துள்ளனர், குறிப்பாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இந்த சட்டத்திருத்தத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு புதிய வடிவான போராட்டம் நடத்துவது அவருக்கு இந்த நாட்டு மக்கள் மீது அக்கறையின் காரணமாக அல்ல, முதலமைச்சர் பதவி மீது உள்ள ஆசைதான்.

முன்னதாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் சுயநலத்தோடு போராட்டம் நடத்தியதால் தோல்வியை தமிழ்நாட்டு மக்கள் பரிசாகக் கொடுத்தார்கள், இப்போதும் அவர் எடுத்திருக்கின்ற போராட்டத்திற்கும் தோல்வியே பரிசாக கிடைக்கும்.

ஏனென்றால் அவர் முதல் அமைச்சர் பதவி மீது வைத்திருக்கின்ற மோகம், அதன் மீதுள்ள பாசம்,ஆசை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் போராட்டம் போராட்டம் என்று தமிழகத்தை போராட்டம் களமாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் சத்தமில்லாமல் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார். இந்திய தேசத்திலே தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்துறையில் பல்வேறு விருதுகள், மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு விருதுகள் மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

இவ்வாறாக விருதுகளுக்கு மேல் விருதுகள் தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறது என்பதால் அவர் விழுந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

கதை சொல்லிப் பார்த்தார், வசனம் சொல்லி பார்த்தார், கடிதம் எழுதிப் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை ஆகவே வீதிக்கு வந்து போராடி பார்க்கிறார். அதுவும் அவருக்கு பலன் கிடைக்காது.

முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் எளிய முறையிலே வளர்ச்சித் திட்டங்கள் முதன்மையான திட்டங்களோடு, தொலைநோக்கு திட்டங்களோடு மக்களுடைய கோரிக்கையை உடனடியாக தீர்வு காண்டு, அதிகக் கோப்புகளை உயிர் கொடுத்து, அதிக மக்களை சந்தித்து, இப்படி எல்லாவற்றிலும் சாதனை படுத்து இருக்கின்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆள வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டம் என்பது எந்த ஒரு வினையையும், எந்த பலனையும் பெற்றுத்தராது.

தவறான, அவதூறு பிரச்சாரம். விஷ விதைகளை சிறுபான்மை மக்கள் மீது விதைத்து விட்டார்கள். ஆனால் உரிய விளக்கம் கொடுத்து தான் அவர்களுக்கு நாம் உண்மையை சொல்லவேண்டும்.

அதிமுக சிறும்பான்மை மக்களுக்கு சிறு தீங்கும் அளித்தது கிடையாது, ஆதாரங்கள் இருந்தால் சுட்டி காட்டுங்கள் என்று கூறியுள்ளோம். அதற்கு எந்தவித பதிலும் கிடையாது, அவர்கள் ஆட்சியில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது அறிந்ததே.

எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மிகப்பெரிய திட்டம், இந்த திட்டத்திற்கு தேவையான சாலை வசதி, விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து கூடிய இடமாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த இடத்தை தேர்வு செய்யப்பட்டது. தற்போது சாலைகள் மேம்பாடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று நில அளவீடு செய்து கூடுதலாக நிலம் ஒதுக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து கோரிக்கைகளையும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது அதனையும் தற்போது நேரில் காணலாம். மதுரைக்கு பெருமை சேர்க்கும் வானளாவிய எய்ம்ஸ் மருத்துவமனையாக அமையும்.

ரஜினியை பற்றி அவரிடம் கேளுங்கள் என்று கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.