ETV Bharat / city

பெண்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது - முதன்மை செயலாளர் பாலசந்திரன்!

பெண்களிடையே அவர்களது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாகவும், பிறருக்காகவே வாழும் பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம் என்று பெண் ஊழியர்களுக்கான மார்பக நோய் கண்டறியும் முகாமினைத் தொடங்கி வைத்த அரசின் முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Jan 23, 2020, 7:19 PM IST

breast cancer camp in erode, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
breast cancer camp in erode

ஈரோடு: பெண்கள் சுகாதாரம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், திருச்சி மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, தனியார் அமைப்பினர் இணைந்து அரசு பெண் ஊழியர்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற முகாமினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளருமான பாலச்சந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

'தேவதையை கண்டேன்' பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

இதனைத் தொடர்ந்து மார்பக புற்றுநோயை கண்டறியும் நடமாடும் வாகனத்தில் உள்ள வசதிகள் குறித்தும், நோய் கண்டறியும் முறை குறித்தும், முடிவுகள் வழங்கப்படும் முறை குறித்தும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். முகாமில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் கண்டறிவது குறித்து அச்சமடையாமல், நோய் இருக்கிறதோ இல்லையோ தங்களது உடலைப் பரிசோதித்துக் கொள்வதில் தவறில்லை என்கிற எண்ணத்துடன் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்வர வேண்டும். பெண்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையை அனைத்துத் தரப்பு பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

7 பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் ரவிச்சந்திரன் மனு

மேலும், முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் பெண்களிடையே அவர்களது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வெகுவாக குறைந்து காணப்படுவதாகவும், பிறருக்காகவே வாழும் பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்தோ, சுகாதாரம் குறித்தோ கவலைப்படாமலிருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஈரோடு: பெண்கள் சுகாதாரம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், திருச்சி மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, தனியார் அமைப்பினர் இணைந்து அரசு பெண் ஊழியர்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற முகாமினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளருமான பாலச்சந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

'தேவதையை கண்டேன்' பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

இதனைத் தொடர்ந்து மார்பக புற்றுநோயை கண்டறியும் நடமாடும் வாகனத்தில் உள்ள வசதிகள் குறித்தும், நோய் கண்டறியும் முறை குறித்தும், முடிவுகள் வழங்கப்படும் முறை குறித்தும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். முகாமில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் கண்டறிவது குறித்து அச்சமடையாமல், நோய் இருக்கிறதோ இல்லையோ தங்களது உடலைப் பரிசோதித்துக் கொள்வதில் தவறில்லை என்கிற எண்ணத்துடன் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்வர வேண்டும். பெண்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையை அனைத்துத் தரப்பு பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

7 பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் ரவிச்சந்திரன் மனு

மேலும், முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் பெண்களிடையே அவர்களது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வெகுவாக குறைந்து காணப்படுவதாகவும், பிறருக்காகவே வாழும் பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்தோ, சுகாதாரம் குறித்தோ கவலைப்படாமலிருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன23

பெண்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது - முதன்மை செயலாளர் பாலசந்திரன்!

தமிழகத்தில் பெண்களிடையே அவர்களது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வெகு குறைவாகவே இருப்பதாகவும், பிறருக்காகவே வாழும் பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம் என்று ஈரோட்டில் அரசு பெண் ஊழியர்களுக்கான மார்பக நோய் கண்டறியும் முகாமினைத் தொடங்கி வைத்த தமிழக அரசின் முதன்மை செயலாளர் பாலச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், திருச்சி மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் தனியார் அமைப்பினர் இணைந்து அரசு பெண் ஊழியர்களுக்கான மார்பக நோய் கண்டறியும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற முகாமினை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளருமான பாலச்சந்திரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மார்பக நோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தில் உள்ள வசதிகள் குறித்தும், நோய் கண்டறியும் முறை குறித்தும், முடிவுகள் வழங்கப்படும் முறை குறித்தும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் கண்டறிவது குறித்து அச்சமடையாமல் நோய் இருக்கிறதோ இல்லையோ தங்களது உடலைப் பரிசோதித்துக் கொள்வதில் தவறில்லை என்கிற எண்ணத்துடன் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்வர வேண்டும், பெண்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்தப் பரிசோதனையை அனைத்துத் தரப்பு பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பாலச்சந்திரன், தமிழகத்தில் பெண்களிடையே அவர்களது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வெகுவாக குறைந்து காணப்படுவதாகவும், பிறருக்காகவே வாழும் பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்தோ, சுகாதாரம் குறித்தோ கவலைப்படாமலிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

Body:மேலும் மாவட்டத்தில் அரசுப் பணியில் பணி புரியும் பெண்களுக்காக நடத்தப்படும் முகாமினை அனைத்துத் தரப்பு பெண் ஊழியர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நோய் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது குறித்தாவது தெரிந்து கொள்வதில் ஊழியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Conclusion:இதனைத் தொடர்ந்து முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல் கட்டமாக அரசு பெண் ஊழியர்களுக்கான தொடங்கப்பட்டுள்ள முகாமினை மாவட்டம் முழுவதுமுள்ள பெண்களுக்கும் இந்த முகாம்கள் விரிவுபடுத்தப்படும் என்றும், 3 நாட்கள் நடக்கும் முகாமில் நாள்தோறும் 60 ஊழியர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும் என்றார்.

பேட்டி : சி.கதிரவன் – மாவட்ட ஆட்சியர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.