ETV Bharat / city

‘அதிமுகவின் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’ - எடப்பாடி பழனிசாமி - tn cm pressmeet at kovai

கோவை: தமிழ்நாட்டில் அதிமுக மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Sep 11, 2019, 11:29 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் வரவேற்ற தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அங்குள்ள தமிழ் மக்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள். நிறைய முதலீடுகளையும், சிறந்த திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து வந்துள்ளேன். அதனை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 26 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால், அதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிமுக செய்துவரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

இது ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால் அவர் பாராட்ட மாட்டார், ஏனென்றால் அவர் குறுகிய எண்ணம் படைத்தவர். கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை குறுகிய காலத்தில் செயல்படுத்தி வருகிறோம். ஆனால், திட்டமிட்டு தவறான செய்திகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார். மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் தடுக்கப்படும். மத்திய அரசின் சட்டத்தை மறுபரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும்”, என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் வரவேற்ற தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அங்குள்ள தமிழ் மக்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள். நிறைய முதலீடுகளையும், சிறந்த திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து வந்துள்ளேன். அதனை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 26 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால், அதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிமுக செய்துவரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

இது ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால் அவர் பாராட்ட மாட்டார், ஏனென்றால் அவர் குறுகிய எண்ணம் படைத்தவர். கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை குறுகிய காலத்தில் செயல்படுத்தி வருகிறோம். ஆனால், திட்டமிட்டு தவறான செய்திகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார். மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் தடுக்கப்படும். மத்திய அரசின் சட்டத்தை மறுபரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும்”, என்றார்.

Intro:திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 26 ஆயிரம் கோடிதான். ஆனால் அதிமுக ஆட்சியில் 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 53 ஆயிரம் கோடிக்கு தொழில் துவங்கப்பட்டுள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..Body:தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் வரவேற்ற தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தமைக்கும் நன்றி

திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 26 ஆயிரம் கோடிதான். ஆனால் அதிமுக ஆட்சியில் 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 53 ஆயிரம் கோடிக்கு தொழில் துவங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக செய்துவரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள்.
குறுகிய எண்ணம் படைத்தவர் ஸ்டாலின்.
கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை குறுகிய காலத்தில் செயல்படுத்தி வருகிறோம்.
திட்டமிட்டு தவறான செய்திகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார்.

திமுக ஆட்சி காலத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
எங்களை விமர்சிக்க ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.
காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகிறது.

காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை மேலும் மூன்று தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நீர் மேலாண்மை மேற்கொள்ளவும், உபரி நீரை சேமிக்கவும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு செயல்பாட்டை அரியாமல் உள்ளார் ஸ்டாலின்.
இந்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்தால் ஆதரிப்போம்.

மோட்டார் வாகன சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் தடுக்கப்படும்.
மத்திய அரசின் சட்டத்தை பரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும்.
டெல்டா பாசனத்திற்கு தூர்வாரும் பணிக்கு 66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டை பற்றியே கவலைப்படாத கட்சி திமுக தான்.

உலக நாடுகளை பார்வையிட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
நேரில் சென்று தெளிவுபடுத்தினால் தான் முதலீடாளார்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
வெளிநாடுகளில் உள்ள விதிமுறைகளை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் சரியான வளர்ச்சி இருக்கும்.

பொருளாதார நெருக்கடி தமிழகத்தில் இல்லை.
தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
என் வெளிநாட்டு பயனம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
கால்நடை வளர்ப்பு வெளிநாட்டில் மிகவும் வித்யாசமாக உள்ளது.

இங்கு ஒரு மாவட்டத்தில் சேகரிக்கும் பால் வெளிநாட்டில் ஒரே இடத்தில் சேகரிக்கப்படுகிறது.
அதே போன்ற நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்தப்படும். கேரள முதல்வரை சந்திக்கும் போது சிறுவாணி உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்
வெளிநாடுகளில் 10 ,12,16 என வழிதடங்கள் இருக்கின்றன.
தமிழகத்தில் 8 வழித்தடங்கள் என்றால் போராட்டம் நடத்துகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள சாலைகள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழகத்தில் நல்ல சூழ்நிலை இருக்கின்றது.
நிறைய முதலீடுகள் வந்து இருக்கின்றது. நெருக்கடி இருந்தால் எப்படி வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.