ETV Bharat / city

திமுக கூட்டத்தில் பெண் மீது தாக்குதலா? - தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம் நோட்டீஸ்!

author img

By

Published : Jan 7, 2021, 5:33 PM IST

கோவை: திமுக நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் கோவை மாவட்ட எஸ்.பிக்கு தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

commission
commission

தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியில் கடந்த வாரம் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுகவை சேர்ந்த பட்டியலினப் பெண்ணான பூங்கொடி என்பவர் கலந்து கொண்டு, ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முயன்றபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.‌

பின்னர் பூங்கொடி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த முனி, ராமன், மகேஸ்வரி ஆகியோர் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர், தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரி தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையத்தில் மனு அளித்தார்.

அந்த மனு மீது விசாரணை நடத்திய கமிஷன் அதிகாரிகள், அடுத்த 15 நாட்களுக்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி ஆகியோர், தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், இது தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: 'திருட்டு வழக்கில் சிக்கிய பெண் காவலர்'- காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன?

தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியில் கடந்த வாரம் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுகவை சேர்ந்த பட்டியலினப் பெண்ணான பூங்கொடி என்பவர் கலந்து கொண்டு, ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முயன்றபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.‌

பின்னர் பூங்கொடி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த முனி, ராமன், மகேஸ்வரி ஆகியோர் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர், தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரி தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையத்தில் மனு அளித்தார்.

அந்த மனு மீது விசாரணை நடத்திய கமிஷன் அதிகாரிகள், அடுத்த 15 நாட்களுக்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி ஆகியோர், தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், இது தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: 'திருட்டு வழக்கில் சிக்கிய பெண் காவலர்'- காவலர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.