தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்தது.
கோவை குற்றாலத்தில் குளிக்க தடை நீக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
கோவை: மூன்று மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கோவை குற்றால அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
![கோவை குற்றாலத்தில் குளிக்க தடை நீக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3819409-thumbnail-3x2-well.jpg?imwidth=3840)
இதனையடுத்து, சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். குறைவான நீர் வருவதால் வனவிலங்குகள் நீரை தேடி அருவிக்கு வரும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் கோவை குற்றாலத்திற்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை முன்னிட்டு, நேற்று முதல் கோவை குற்றால அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டதோடு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். இதனையடுத்து, இன்று கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு தற்போது படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்தது.
இதனையடுத்து, சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். குறைவான நீர் வருவதால் வனவிலங்குகள் நீரை தேடி அருவிக்கு வரும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் கோவை குற்றாலத்திற்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை முன்னிட்டு, நேற்று முதல் கோவை குற்றால அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டதோடு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். இதனையடுத்து, இன்று கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு தற்போது படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
Body:கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது மேலும் அருவிகளில் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்து இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு செல்ல கடந்த மார்ச் 26 ஆம் தேதி வனத்துறையினர் தடை விதித்தனர் குறைவான நீர் வருவதால் வனவிலங்குகள் நீரை தேடி அருவிக்கு வரும் என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர் கடந்த மூன்று மாதங்களாக நீர்வரத்து இல்லாததால் அருவியில் குறைந்த அளவு நீர் வந்து கொண்டிருந்தது இதனால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது நீரின் அளவு குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் கோவை குற்றால அருவிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் நேற்று அறிவித்தார் இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர் மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார் இது குறித்து சுற்றுலா கூறுகையில் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மகிழ்ச்சியாக அருவிக்கு வந்ததாகவும் அருவியில் நீர்வரத்து உள்ளதால் குடும்பத்துடன் வந்து குளித்து வருவதாகவும் தெரிவித்தனர் கோவை மட்டுமல்லாமல் நீலகிரி,திருப்பூர்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு தற்போது படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
Conclusion: