ETV Bharat / city

கோவை குண்டுவெடிப்பு; 24 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடும் சிபிசிஐடி!

author img

By

Published : Apr 7, 2022, 5:05 PM IST

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக உள்ள இருவரை தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் இருவர் குறித்து தகவல் அளித்தால், தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Kovai bomb blast
Kovai bomb blast

கோவையில் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, கோவை மாநகரின் 11 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, முகமது அன்சாரி உள்பட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், 14 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் என்ற முஜி, சாதிக் என்கிற ராஜா ஆகிய இருவர் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்கள் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.

siddiq
சாதிக் (எ) ராஜா

தற்போது அவர்களை பிடிக்க சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு, கோவை, திருச்சி, மதுரை என மூன்று மாவட்டங்களில் 3 தனிப்படைகளை அமைத்துள்ளது.

ஏற்கனவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இம்மாநிலங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஓட்டியும், விசாரணை நடத்த தனிப்படைகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவர் குறித்து தகவல் அளித்தால் தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பள்ளி மாணவி கடத்தல்... காட்டிக்கொடுத்த செல்ஃபோன் சிக்னல்... வசமாக சிக்கிய இருவர்

கோவையில் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, கோவை மாநகரின் 11 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, முகமது அன்சாரி உள்பட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், 14 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் என்ற முஜி, சாதிக் என்கிற ராஜா ஆகிய இருவர் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்கள் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.

siddiq
சாதிக் (எ) ராஜா

தற்போது அவர்களை பிடிக்க சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு, கோவை, திருச்சி, மதுரை என மூன்று மாவட்டங்களில் 3 தனிப்படைகளை அமைத்துள்ளது.

ஏற்கனவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இம்மாநிலங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஓட்டியும், விசாரணை நடத்த தனிப்படைகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவர் குறித்து தகவல் அளித்தால் தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பள்ளி மாணவி கடத்தல்... காட்டிக்கொடுத்த செல்ஃபோன் சிக்னல்... வசமாக சிக்கிய இருவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.