ETV Bharat / city

மசோதா திருப்தியாக இல்லை: திருநங்கை கல்கி சுப்ரமணியம்! - kalki Subramaniyam

கோவை: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மசோதா திருப்தியாக இல்லை என திருநங்கை கல்கி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மூன்றாம்
author img

By

Published : Aug 20, 2019, 4:38 PM IST

கோவை மாவட்டத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதிவரை பால் புதுமையினரின் உரிமைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் திருநங்கை கல்கி சுப்ரமணியம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை பிரமாண்ட வானவில் சுயமரியாதை பேரணி நடைபெறுகிறது. இதில் ஒரு பால் ஈர்ப்பு கொண்டோர், இரு பால் ஈர்ப்பு கொண்டோர், திருநங்கைகள், திருநம்பிகள், மகிழ்வன், மகிழ்வி என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். எங்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்வதற்காக இந்த பேரணி நடத்தப்படுகிறது என்றார்.

திருநங்கை கல்கி சுப்ரமணியம் செய்தியாளர் சந்திப்பு

மேலும் பேசிய அவர், ஒரு பால் ஈர்ப்பு தவறல்ல என நீதிமன்றம் தெரிவித்த பின்னரும், அவர்களின் காதல் தொடர்ந்து சிறுமைப்படுத்தப்படுகிறது. மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா எங்களுக்கு திருப்தியாக இல்லை. அந்த மசோதாவில் செய்ய வேண்டிய மாற்றங்களை சுயமரியாதை பேரணியில் வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.

அதேபோல், பெண்ணிற்கு வன்கொடுமை நடக்கும்போது வன்புணர்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்கப்படுவதை போல மூன்றாம் பாலினத்தவர்களை வன்கொடுமை செய்யும்போதும் தண்டணை கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கோவை மாவட்டத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதிவரை பால் புதுமையினரின் உரிமைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் திருநங்கை கல்கி சுப்ரமணியம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை பிரமாண்ட வானவில் சுயமரியாதை பேரணி நடைபெறுகிறது. இதில் ஒரு பால் ஈர்ப்பு கொண்டோர், இரு பால் ஈர்ப்பு கொண்டோர், திருநங்கைகள், திருநம்பிகள், மகிழ்வன், மகிழ்வி என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். எங்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்வதற்காக இந்த பேரணி நடத்தப்படுகிறது என்றார்.

திருநங்கை கல்கி சுப்ரமணியம் செய்தியாளர் சந்திப்பு

மேலும் பேசிய அவர், ஒரு பால் ஈர்ப்பு தவறல்ல என நீதிமன்றம் தெரிவித்த பின்னரும், அவர்களின் காதல் தொடர்ந்து சிறுமைப்படுத்தப்படுகிறது. மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா எங்களுக்கு திருப்தியாக இல்லை. அந்த மசோதாவில் செய்ய வேண்டிய மாற்றங்களை சுயமரியாதை பேரணியில் வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.

அதேபோல், பெண்ணிற்கு வன்கொடுமை நடக்கும்போது வன்புணர்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்கப்படுவதை போல மூன்றாம் பாலினத்தவர்களை வன்கொடுமை செய்யும்போதும் தண்டணை கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Intro:குற்றம் சாட்டும் சமூகமே எங்களை சிதைக்கிறது. திருநங்கை கல்கி சுப்ரமணியம் பேட்டி.Body:கோவையில் சகோதரி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
கோவையில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 25 வரை பால் புதுமையினரின் உரிமைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது எனவும்,
இறுதியாக வரும்
ஆகஸ்ட் 24 சனிக்கிழமை மாலை கோவையில் பிரமாண்ட வானவில் சுயமரியாதை பேரணி நடத்தப்படுகின்றது என தெரிவித்தார். இந்த பேரணியில் ஒரு பாலீர்ப்பு கொண்டோர், இரு பாலீர்ப்பு கொண்டோர், திருநங்கைகள், திருநம்பிகள், மகிழ்வன், மகிழ்வி என ஏராளமானோர் பங்கேற்கின்றனர் எனவும் தெரிவித்தார். நாட்டில் எல்லாருக்கும் வாழவும், காதல் செய்யவும், அன்பு செலுத்தவும் உரிமை உண்டு என கூறிய அவர்,
ஒரு பால் ஈர்ப்பு கொண்டவர்கள், இரு பால் ஈர்ப்பு கொண்டவர்கள், திருநங்கை, திருநம்பி, மகிழ்வன், மகிழ்வி போன்றவர்களின் காதல் சிறுமைபடுத்தபடுகின்றது எனவும் தெரிவித்தார்.
மாற்று பாலினத்தவரை மூன்றாம் பாலினமாகவும்,
ஒரு பால் ஈர்ப்பு தவறல்ல எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என கூறிய அவர், உரிமைகள் குறித்து விளக்கவும் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லவும் இந்த பேரணி நடத்தப்படுகின்றது எனவும், இந்த பேரணியில்
7 வண்ண உடைகள் உடுத்தி பங்கேற்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.


பெற்றோர்தான் மூன்றாம் பாலினத்தவர் பிச்சை எடுக்க காரணம் என கூறிய அவர், வேறு வழியில்லாமல் மூன்றாம் பாலினத்தவர் பாலியல் தொழிலும், பிச்சையும் எடுக்கின்றனர் என தெரிவித்தார்.மூன்றாம் பாலினம் தொடர்பாக
மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தங்களுக்கு
திருப்தியாப இல்லை எனவும்,
மூன்றாம் பாலினத்தவரை வன்புணர்வு , வன்கொடுமை செய்தால்
2 தண்டணை என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் இதை மாற்ற வேண்டும் எனவும் கோவையில் நடக்கும் சுயமரியாதை பேரணியில் வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.பெண்ணிற்கு வன்கொடுமை நடக்கும் போது வன்புணர்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்கப்படுவதை போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு
வன்கொடுமை செய்யும் போது தண்டணை கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.