ETV Bharat / city

‘பழங்குடியினருக்குத் தெரியாமலேயே மனித நேய வார விழா’ - சமூக ஆர்வலர் கருத்து

author img

By

Published : Jan 25, 2020, 7:52 AM IST

கோவை: பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெறும் மனித நேய வார விழா பழங்குடியினருக்கு தெரியாமலே நடக்கிறது என்று சமூக ஆர்வலர் ஜோஸ்வா கருத்து தெரிவித்துள்ளார்.

Humanitarian Week Celebration in KOVAI
Humanitarian Week Celebration in KOVAI

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி வாரம் மனித நேய வாரமாக அனுசரிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த விழா கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

இவ்விழா குறித்து சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், ‘இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும் இதுகுறித்த தகவல் மலைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு சரிவர தெரிய வருவதில்லை. நாளைக்கு நிகழ்ச்சி என்றால் இன்று இரவு தான் அப்பகுதி மக்களுக்கு தகவலே சென்றடைகிறது என்று கூறினார். பழங்குடியினர் நலத்துறை அவசர அவசரமாக பழங்குடியினர் மக்களை அழைத்து வந்து அவர்களை பழங்குடியினர் நடனம் ஆடச் சொல்லி ஒரு காட்சி பொருளாகவே இந்த விழாவை நடத்துகிறார்கள்’ என்று குற்றஞ்சாட்டினார்.

சமூக ஆர்வலர் ஜோஸ்வா பேட்டி

மேலும் பேசிய அவர், ‘பழங்குடியினருக்கு நல திட்டங்கள் செய்யும் பொருட்டு அரசு அதிகமாக எதுவும் செய்யவில்லை. இந்த விழாவானது யாருக்காக நடத்தப்படுகிறதோ அந்த மக்கள் பலருக்கும் இந்த தகவல் தெரியாதது வருத்தமளிக்கிறது. எனவே வருகின்ற காலங்களிலாவது மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி வாரம் மனித நேய வாரமாக அனுசரிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த விழா கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

இவ்விழா குறித்து சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், ‘இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும் இதுகுறித்த தகவல் மலைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு சரிவர தெரிய வருவதில்லை. நாளைக்கு நிகழ்ச்சி என்றால் இன்று இரவு தான் அப்பகுதி மக்களுக்கு தகவலே சென்றடைகிறது என்று கூறினார். பழங்குடியினர் நலத்துறை அவசர அவசரமாக பழங்குடியினர் மக்களை அழைத்து வந்து அவர்களை பழங்குடியினர் நடனம் ஆடச் சொல்லி ஒரு காட்சி பொருளாகவே இந்த விழாவை நடத்துகிறார்கள்’ என்று குற்றஞ்சாட்டினார்.

சமூக ஆர்வலர் ஜோஸ்வா பேட்டி

மேலும் பேசிய அவர், ‘பழங்குடியினருக்கு நல திட்டங்கள் செய்யும் பொருட்டு அரசு அதிகமாக எதுவும் செய்யவில்லை. இந்த விழாவானது யாருக்காக நடத்தப்படுகிறதோ அந்த மக்கள் பலருக்கும் இந்த தகவல் தெரியாதது வருத்தமளிக்கிறது. எனவே வருகின்ற காலங்களிலாவது மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

Intro:மனித நேய வார விழா சமூக ஆர்வலர் கருத்துBody:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மனித நேய வார விழா பற்றி மலைவாழ் மக்களுக்காக பணிபுரியும் சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும் இது குறித்த தகவல் மலைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு சரிவர தெரிய வருவதில்லை என்று தெரிவித்தார். நாளைக்கு நிகழ்ச்சி என்றால் இன்று இரவு தான் அப்பகுதி மக்களுக்கு தகவலே சென்றடைகிறது என்று கூறினார். மேலும் இந்த பழங்குடியினர் நலத்துறை அவசர அவசரமாக பழங்குடியினர் மக்களை அழைத்து வந்து அவர்களை பழங்குடியினர் நடனம் ஆட சொல்லி ஒரு காட்சி பொருளாகவே நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். பழங்குடியினருக்கு நல திட்டங்கள் செய்யும் பொருட்டு அரசு அதிகமாக எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். இந்த விழாவானது யாருக்காக நடத்தப்படுகிறதோ அந்த மக்கள் பலருக்கும் இந்த தகவல் தெரியாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். எனவே வருகின்ற காலங்களிலாவது மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.