ETV Bharat / city

கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்!

author img

By

Published : Nov 15, 2019, 3:29 PM IST

கோவை: தோட்டத்திலிருந்த 16 அடி ராஜநாகம், பத்திரமாக பிடிக்கப்பட்டு அருகிலிருந்த வனத்தில் விடப்பட்டது.

king cobra

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மாலை வனப்பகுதி ஒட்டியுள்ள தினேஷ்குமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நீளமான அரியவகை பாம்பு உள்ளதாக வனத் துறையினருக்கும் பாம்பு பிடிப்பவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பவரான சந்தோஷ் குமார், தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டின் அருகே இருந்த பாம்பை வெளியே கொண்டுவந்தார்.

கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்

அப்போதுதான் அது 16 அடி நீளமுள்ள ராஜநாகம் என்று தெரியவந்தது. சந்தோஷ் குமார் மிக கவனமாகவும், பாம்பை பத்திரமாகவும் பிடித்து, போளுவம்பட்டி வனத் துறையினர் உதவியுடன் வைதேகி அருவி பகுதியிலுள்ள அடர்ந்த வனத்தில் விட்டார்.

இதையும் படிங்க: பல முறை மயக்கமடைந்த 'அரிசி ராஜா' காட்டுயானை !

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மாலை வனப்பகுதி ஒட்டியுள்ள தினேஷ்குமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நீளமான அரியவகை பாம்பு உள்ளதாக வனத் துறையினருக்கும் பாம்பு பிடிப்பவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பவரான சந்தோஷ் குமார், தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டின் அருகே இருந்த பாம்பை வெளியே கொண்டுவந்தார்.

கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்

அப்போதுதான் அது 16 அடி நீளமுள்ள ராஜநாகம் என்று தெரியவந்தது. சந்தோஷ் குமார் மிக கவனமாகவும், பாம்பை பத்திரமாகவும் பிடித்து, போளுவம்பட்டி வனத் துறையினர் உதவியுடன் வைதேகி அருவி பகுதியிலுள்ள அடர்ந்த வனத்தில் விட்டார்.

இதையும் படிங்க: பல முறை மயக்கமடைந்த 'அரிசி ராஜா' காட்டுயானை !

Intro:கோவையில் பிடிபட்டட்டது 16 அடி ராஜநாகம் - பாம்பை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது..Body:கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிகடி ஊருக்குள் வருவது வழக்கம் அதை தொடர்ந்து வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதிக்குள் துரத்தி விடப்படும். இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதி ஒட்டியுள்ள தினேஷ்குமார் சொந்தமான தோட்டத்தில் நீளமான அரியவகை பாம்பு உள்ளதாக வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவரான சந்தோஷ் குமார் தனது குழுவினர் வந்து பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டின் அருகே பாம்பு இருப்பதை பார்த்த குழுவினர் உடனடியாக பாம்பை வெளியே கொண்டு வந்தனர். அப்போது தான் தெரிய வந்தது 16 அடி நீளமுள்ள ராஜநாகம் என தெரியவந்தது. சந்தோஷ் குமார் மிக கவனமாகவும், பாம்பை பத்திரமாக பிடித்து பையில் போட்டு போளுவம்பட்டி வனத்துறையினர் உதவியுடன் வைதேகி நீர் வீழ்ச்சி பகுதியான அடர்ந்த வனத்தில் விடப்பட்டது.

16 அடி ராஜநாகத்தை பிடிப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். பாம்பு என்றாலே படபடக்கும் ஆனால் இந்த ராஜ நாகத்தை லாவகரமாக கையாண்ட சந்தோஷ்குமார் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.