ETV Bharat / city

பத்தாம் வகுப்பு தேர்வு - மகிழ்ச்சியுடன் எழுதுங்கள், மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுரை!

author img

By

Published : May 6, 2022, 11:14 AM IST

Updated : May 6, 2022, 1:13 PM IST

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தேர்வினை மகிழ்ச்சியுடன் எழுதுங்கள் மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுரை
தேர்வினை மகிழ்ச்சியுடன் எழுதுங்கள் மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுரை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசினர் ஹோபார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். மேலும் மாணவிகள் மகிழ்ச்சியுடனும் அச்சமின்றி தேர்வை எழுத வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவர்கள் 3926 மையங்களில் எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் பதற்றம் அடையாமல் பயப்படாமல் தாங்கள் படித்ததை எழுத வேண்டும் என கூறி உள்ளோம். மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து தேர்வை எழுதி வருகின்றனர்.

அவர்களுக்குரிய அச்சத்தை போக்க வேண்டும் என்பதற்காக நேரில் பார்த்து வாழ்த்து கூற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது....

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசினர் ஹோபார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். மேலும் மாணவிகள் மகிழ்ச்சியுடனும் அச்சமின்றி தேர்வை எழுத வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவர்கள் 3926 மையங்களில் எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் பதற்றம் அடையாமல் பயப்படாமல் தாங்கள் படித்ததை எழுத வேண்டும் என கூறி உள்ளோம். மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து தேர்வை எழுதி வருகின்றனர்.

அவர்களுக்குரிய அச்சத்தை போக்க வேண்டும் என்பதற்காக நேரில் பார்த்து வாழ்த்து கூற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது....

Last Updated : May 6, 2022, 1:13 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.