ETV Bharat / city

'வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்' - சென்னை ஆணையர் - 144 உத்தரவு

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் வலியுறுத்தியுள்ளார்.

two wheeler should avoid getting outdoors unnecessarily
two wheeler should avoid getting outdoors unnecessarily
author img

By

Published : Mar 25, 2020, 5:44 PM IST

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேச சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மேலும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து தேவையின்றி வெளியே வருகின்றனர். அதைத் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் இருக்கும் பகுதியிலுள்ள கடைகளிலேயே பொருள்கள் வாங்க வேண்டும்.மேலும் இடைவெளி விட்டு கடைகளில் நிற்க வேண்டும். பொதுமக்கள் நிச்சயம் ஒத்துழைப்பு தர வேண்டும்.குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு சமூகப் பொறுப்புள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் நிச்சயமாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதை வைத்தே அனுமதி வழங்கி வருகின்றோம்.

சென்னை ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க வீடியோ கால் மூலம் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் காவல் துறை, மாநகராட்சி, மருத்துவத் துறை ஆகியவை சேர்ந்து கண்காணிக்க 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: முதலமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரை!

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேச சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மேலும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து தேவையின்றி வெளியே வருகின்றனர். அதைத் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் இருக்கும் பகுதியிலுள்ள கடைகளிலேயே பொருள்கள் வாங்க வேண்டும்.மேலும் இடைவெளி விட்டு கடைகளில் நிற்க வேண்டும். பொதுமக்கள் நிச்சயம் ஒத்துழைப்பு தர வேண்டும்.குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு சமூகப் பொறுப்புள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் நிச்சயமாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதை வைத்தே அனுமதி வழங்கி வருகின்றோம்.

சென்னை ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க வீடியோ கால் மூலம் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் காவல் துறை, மாநகராட்சி, மருத்துவத் துறை ஆகியவை சேர்ந்து கண்காணிக்க 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: முதலமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.