ETV Bharat / city

‘ஹிட்லரைவிட எடப்பாடி பழனிசாமி மோசம்’: டிடிவி தினகரன்

author img

By

Published : Dec 16, 2020, 3:19 PM IST

சென்னை: ஹிட்லரைவிட மோசமாக முதலமைச்சர் பழனிசாமி நடந்துகொண்டிருக்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

‘ஹிட்லரை விட மோசமானவராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ -டிடிவி காட்டம்!
‘ஹிட்லரை விட மோசமானவராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ -டிடிவி காட்டம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தபிறகும் அரசு உதவிப் பொறியாளர்களுக்கான ஊதிய குறைப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பிடிவாதம் காட்டுவது கொஞ்சமும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

அரசு எந்திரத்தின் பணிகளை தொடக்க நிலையில், தங்களின் தோள்களில் சுமந்து செயல்படும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்களுக்கு முதலமைச்சராக மட்டுமின்றி, அந்தத்துறைகளின் அமைச்சராகவும் இருக்கிற பழனிசாமி நேரடியாக இழைத்திருக்கிற மிகப்பெரிய அநீதியாகும். உலகத்தில் வேறெங்கும் நிகழாத கொடுமையாக ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு ரூ.15ஆயிரம் வரை ஊதியத்தைக் குறைத்து ஹிட்லரைவிட மோசமானவராக முதலமைச்சர் பழனிசாமி நடந்துகொண்டிருக்கிறார். அரசு உதவிப் பொறியாளர்களை தன் வழக்கமான பாணியில் நம்பவைத்து கழுத்தறுத்திருக்கிறார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை

இவ்வளவு கோரிக்கைகள் எழுந்தபிறகாவது இது குறித்த தமது முடிவை பழனிசாமி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு உதவிப்பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தை திருத்தியமைத்து அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'தமிழன் எம்மொழியும் கற்கத் தயாராக உள்ளான், ஆனால் திணித்தால் காறித் துப்பிவிடுவான்' - கமல் ஹாசன் பேச்சு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தபிறகும் அரசு உதவிப் பொறியாளர்களுக்கான ஊதிய குறைப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பிடிவாதம் காட்டுவது கொஞ்சமும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

அரசு எந்திரத்தின் பணிகளை தொடக்க நிலையில், தங்களின் தோள்களில் சுமந்து செயல்படும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்களுக்கு முதலமைச்சராக மட்டுமின்றி, அந்தத்துறைகளின் அமைச்சராகவும் இருக்கிற பழனிசாமி நேரடியாக இழைத்திருக்கிற மிகப்பெரிய அநீதியாகும். உலகத்தில் வேறெங்கும் நிகழாத கொடுமையாக ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு ரூ.15ஆயிரம் வரை ஊதியத்தைக் குறைத்து ஹிட்லரைவிட மோசமானவராக முதலமைச்சர் பழனிசாமி நடந்துகொண்டிருக்கிறார். அரசு உதவிப் பொறியாளர்களை தன் வழக்கமான பாணியில் நம்பவைத்து கழுத்தறுத்திருக்கிறார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை

இவ்வளவு கோரிக்கைகள் எழுந்தபிறகாவது இது குறித்த தமது முடிவை பழனிசாமி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு உதவிப்பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தை திருத்தியமைத்து அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'தமிழன் எம்மொழியும் கற்கத் தயாராக உள்ளான், ஆனால் திணித்தால் காறித் துப்பிவிடுவான்' - கமல் ஹாசன் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.