ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

author img

By

Published : Apr 11, 2021, 11:39 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

காலை 11 மணி செய்திச் சுருக்கம்
காலை 11 மணி செய்திச் சுருக்கம்

1.இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கரோனா

இதுவரை நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 443 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

2.கரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவராவ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

3. அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா பாதிப்பு!

கரூர்: அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. ’தமிழ்நாட்டின் மீதுள்ள எரிச்சலில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை கலைத்த பாஜக’

தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் ஏழு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை பாஜக அரசு கலைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

5.இயந்திரக் கோளாறு காரணமாக துபாய் செல்லும் விமானம் ரத்து

சென்னை: துபாய் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட திடீா் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

6.’தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு’ - டெட்ரோஸ் அதானோம் குற்றச்சாட்டு

ஜெனிவா: உலக அளவிலான தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் குற்றம் சாட்டியுள்ளார்.

7.சக்தி வாய்ந்த ஆயுதங்களை உபயோகித்த மியான்மர் ராணுவம்: 80 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: பாகோவில் ராணுவத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையும், ராணுவமும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

8.கரோனா பரிசோதனையில் குளறுபடி: ஸ்வாப் ஸ்டிக்குகளை உடைக்கும் ஊழியர்கள்!

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் ஸ்டிக்குகளை ஊழியர்கள் உடைத்துவிட்டு, கரோனா பரிசோதனை செய்துவிட்டதாக கணக்குக் காட்டிவந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

9.மதுரையில் அதிகாலை பெய்த திடீர் மழை

மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.

10.தமிழ்நாட்டின் பெரிய தொகுதியில் குறைந்த அளவு வாக்குப்பதிவு!

செங்கல்பட்டு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில், ஏறத்தாழ பாதிக்குப் பாதி வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளது, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1.இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கரோனா

இதுவரை நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 443 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

2.கரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவராவ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

3. அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா பாதிப்பு!

கரூர்: அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. ’தமிழ்நாட்டின் மீதுள்ள எரிச்சலில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை கலைத்த பாஜக’

தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் ஏழு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை பாஜக அரசு கலைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

5.இயந்திரக் கோளாறு காரணமாக துபாய் செல்லும் விமானம் ரத்து

சென்னை: துபாய் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட திடீா் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

6.’தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு’ - டெட்ரோஸ் அதானோம் குற்றச்சாட்டு

ஜெனிவா: உலக அளவிலான தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் குற்றம் சாட்டியுள்ளார்.

7.சக்தி வாய்ந்த ஆயுதங்களை உபயோகித்த மியான்மர் ராணுவம்: 80 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: பாகோவில் ராணுவத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையும், ராணுவமும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

8.கரோனா பரிசோதனையில் குளறுபடி: ஸ்வாப் ஸ்டிக்குகளை உடைக்கும் ஊழியர்கள்!

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் ஸ்டிக்குகளை ஊழியர்கள் உடைத்துவிட்டு, கரோனா பரிசோதனை செய்துவிட்டதாக கணக்குக் காட்டிவந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

9.மதுரையில் அதிகாலை பெய்த திடீர் மழை

மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.

10.தமிழ்நாட்டின் பெரிய தொகுதியில் குறைந்த அளவு வாக்குப்பதிவு!

செங்கல்பட்டு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில், ஏறத்தாழ பாதிக்குப் பாதி வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளது, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.