ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

author img

By

Published : Feb 10, 2020, 8:17 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

VAOs arrested
VAOs arrested

2017ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 19 பேர், குரூப்-4 தேர்வில் 15 பேர், வி.ஏ.ஓ. தேர்வில் ஒருவர் என, மொத்தம் 35 நபர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குரூப்-2 ஏ, குரூப் 4 தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார், கடந்த 6ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின், சிபிசிஐடி காவல் துறையினர் 7 நாள்கள் காவலில், எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று (பிப். 09) உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிறையில் உள்ள ஓம் காந்தனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது ஜெயக்குமார், ஓம் காந்தன் இருவரையும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் உள்ள தேர்வு மையங்களுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு, தேர்வுத் தாளில் முறைகேடு செய்தது எப்படி என்பது குறித்து செயல்முறையாக செய்து காட்டினர்.

இந்நிலையில் ஓம் காந்தனிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த ஓட்டுநர்களான கார்த்திக்(39), செந்தில் குமார்(36), பெரம்பூரைச் சேர்ந்த சாபுதீன்(42) ஆகியோர் முறைகேடு செய்ய உதவி புரிந்தது தெரியவந்தது. மேலும், குரூப் 4 தேர்வு விடைத்தாளை ராமநாதபுரம் மையத்திலிருந்து சென்னைக்கு கொண்டுச் சென்றபோது, இவர்கள் மூவரும் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனுக்கு தகவல் தெரிவித்ததும், அப்போது ஓம் காந்தனின் காரில் சென்ற ஜெயக்குமார், வாகன சோதனை நடைபெறுகிறதா என கண்காணித்து தகவல் கூறியதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, முறைகேட்டுக்கு உதவி புரிந்த ஓட்டுநர்கள் மூவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி முறைகேட்டுக்குப் பயன்படுத்திய ஓம் காந்தன், கார்த்திக்கின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

VAOs arrested

இதனிடையே, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலர்கள் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள படலையார் கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம்(29), பனையஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜ் (36) ஆகியோர் ஜெயக்குமாரிடம் தலா 7 லட்சம் ரூபாயை கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரியவந்ததால், இவர்கள் இருவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்த நாள் விழா - சேவல் சண்டைக்கு அனுமதி கோரி மனு!

2017ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 19 பேர், குரூப்-4 தேர்வில் 15 பேர், வி.ஏ.ஓ. தேர்வில் ஒருவர் என, மொத்தம் 35 நபர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குரூப்-2 ஏ, குரூப் 4 தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார், கடந்த 6ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின், சிபிசிஐடி காவல் துறையினர் 7 நாள்கள் காவலில், எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று (பிப். 09) உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிறையில் உள்ள ஓம் காந்தனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது ஜெயக்குமார், ஓம் காந்தன் இருவரையும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் உள்ள தேர்வு மையங்களுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு, தேர்வுத் தாளில் முறைகேடு செய்தது எப்படி என்பது குறித்து செயல்முறையாக செய்து காட்டினர்.

இந்நிலையில் ஓம் காந்தனிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த ஓட்டுநர்களான கார்த்திக்(39), செந்தில் குமார்(36), பெரம்பூரைச் சேர்ந்த சாபுதீன்(42) ஆகியோர் முறைகேடு செய்ய உதவி புரிந்தது தெரியவந்தது. மேலும், குரூப் 4 தேர்வு விடைத்தாளை ராமநாதபுரம் மையத்திலிருந்து சென்னைக்கு கொண்டுச் சென்றபோது, இவர்கள் மூவரும் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனுக்கு தகவல் தெரிவித்ததும், அப்போது ஓம் காந்தனின் காரில் சென்ற ஜெயக்குமார், வாகன சோதனை நடைபெறுகிறதா என கண்காணித்து தகவல் கூறியதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, முறைகேட்டுக்கு உதவி புரிந்த ஓட்டுநர்கள் மூவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி முறைகேட்டுக்குப் பயன்படுத்திய ஓம் காந்தன், கார்த்திக்கின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

VAOs arrested

இதனிடையே, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலர்கள் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள படலையார் கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம்(29), பனையஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜ் (36) ஆகியோர் ஜெயக்குமாரிடம் தலா 7 லட்சம் ரூபாயை கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரியவந்ததால், இவர்கள் இருவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்த நாள் விழா - சேவல் சண்டைக்கு அனுமதி கோரி மனு!

Intro:Body:*டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் 2 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 3 கார் ஓட்டுனர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

கடந்த 2017 ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுவரை குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 19 நபர்களும் குரூப்-4 தேர்வில் 16 நபர்களும்,வி.ஏ.ஓ தேர்வில் 1 நபரும் என மொத்தம் 35 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் குரூப்2ஏ மற்றும் குரூப்4 தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டு முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயகுமார் கடந்த 6 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் நேற்று சிபிசிஐடி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஓம் காந்தனை சிபிசிஐடி போலீசார் 5நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரித்தனர்.

அப்போது ஜெயகுமார் மற்றும் ஓம் காந்தனை சிபிசிஐடி போலீசார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு இவர்கள் தேர்வு தாளில் முறைகேடு செய்தது எப்படி உள்ளிட்டவற்றை செயல்முறையாக செய்து காட்ட சிபிசிஐடி போலீசாரிட செய்து காட்டினார்.பின்னர் ஓம் காந்தனின் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஓம் காந்தனிடம் நடத்திய விசாரணையில் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த தனியார் ஓட்டுனர்களான கார்த்திக்(39),செந்தில் குமார்(36),பெரம்பூரை சேர்ந்த சாபுதீன்(42) ஆகியோர் முறைகேடு செய்ய உதவி புரிந்தது.மேலும் இவர்கள் குரூப்4 தேர்வு விடைத்தாளை ராமநாதபுரம் மையத்திலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் போது இவர்கள் மூன்று பேரும் ஜெயகுமார் மற்றும் ஓம் காந்தனுக்கு தகவல்கள் சொல்லியும்,ஜெயகுமார் விடைத்தாள் பண்டல்களை எடுத்து செல்லும் போது ஓம் காந்தனின் காரில் முன் சென்று ஏதாவது வாகன சோதனை நடைப்பெறுகிறதா என கண்காணித்து தகவல் கூறியுள்ளனர்.இதனால் முறைகேட்டிற்கு உதவி புரிந்த 3 கார் ஓட்டுனர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த முறைகேட்டிற்கு பயன்படுத்திய ஓம் காந்தனின் கார் மற்றும் குற்றவாளி கார்த்திக்கின் கார் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில் ஏற்கெனவே 3 கிராம நிர்வாக அலுவலரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று கன்னியாக்குமரி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள படலையார் கிராமம் கிராம நிர்வாக அலுவலரான பன்னீர் செல்வம்( 29) மற்றும் பனையஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகரான செந்தில்ராஜ் (36) ஆகியோர் இவர்கள் இருவரும் ஜெயகுமாரிடம் தலா 7 லட்ச ரூபாயை கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரியவந்து இவர்கள் இருவரையும் சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.