ETV Bharat / city

தலைமை அலுவலகத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!

author img

By

Published : Dec 18, 2020, 2:12 PM IST

Updated : Dec 18, 2020, 3:49 PM IST

சென்னை: தொடரும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை ஒட்டி, தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திலேயே துணை மின்நிலைய பராமரிப்புப் பணி, அரசு சாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தலைமை அலுவலத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!
தலைமை அலுவலத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!

சென்னை தலைமை அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 230/33 கேவி துணை மின் நிலையத்தின் பராமரிப்புப் பணியை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் 2 ஆண்டுகள் பராமரிப்பதற்கு கட்டணமாக 81 லட்சத்து 36 ஆயிரத்து 241 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு புதிதாக 230/110 கேவி துணை மின் நிலையம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் தலைமைப் பொறியாளர் (இயக்கம்) சென்னை மேற்கு கோட்ட மேற்பார்வை பொறியாளருக்கு செப். 21ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்படும் 230/33 கேவி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு 91 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த துணை மின் நிலையங்கள் குத்தகை அனைத்தும் டெண்டர் விடப்பட்டு, விதிகளின்படி பராமரிக்கப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!
தலைமை அலுவலகத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!

மேலும், மின் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லாமல் பராமரிக்க நிறுவனத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விதிகளின்படியே டெண்டர்கள் விட வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

அதனடிப்படையில் சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் ரங்கவடிவேல் ஒப்பந்தம் விட்டு, சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் ஸ்ரீவாரி எலக்ட்ரிக்கல்ஸ் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அனுமதி வழங்கி உள்ளார்.

அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 230/33 துணை மின்நிலையத்தை 2 ஆண்டுகள் பராமரிக்க 81 லட்சத்து 36 ஆயிரத்து 241 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

மின்தடை ஏற்படாத வகையில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதற்கான வைப்புத்தொகையாக 4 லட்சத்து 6 ஆயிரத்து 810 செலுத்த வேண்டும்.

பணியில் தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு ஒன்றில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டம் பெற்றவர்களை நியமிக்க வேண்டும். வயர்மேன் பணியில் ஐடிஐ முடித்தவர்களை நியமிக்க வேண்டும். தினமும் 8 மணி நேரம் வேலைப் பணியாக வழங்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை தலைமை அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 230/33 கேவி துணை மின் நிலையத்தின் பராமரிப்புப் பணியை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் 2 ஆண்டுகள் பராமரிப்பதற்கு கட்டணமாக 81 லட்சத்து 36 ஆயிரத்து 241 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு புதிதாக 230/110 கேவி துணை மின் நிலையம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் தலைமைப் பொறியாளர் (இயக்கம்) சென்னை மேற்கு கோட்ட மேற்பார்வை பொறியாளருக்கு செப். 21ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்படும் 230/33 கேவி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு 91 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த துணை மின் நிலையங்கள் குத்தகை அனைத்தும் டெண்டர் விடப்பட்டு, விதிகளின்படி பராமரிக்கப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!
தலைமை அலுவலகத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!

மேலும், மின் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லாமல் பராமரிக்க நிறுவனத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விதிகளின்படியே டெண்டர்கள் விட வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

அதனடிப்படையில் சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் ரங்கவடிவேல் ஒப்பந்தம் விட்டு, சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் ஸ்ரீவாரி எலக்ட்ரிக்கல்ஸ் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அனுமதி வழங்கி உள்ளார்.

அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 230/33 துணை மின்நிலையத்தை 2 ஆண்டுகள் பராமரிக்க 81 லட்சத்து 36 ஆயிரத்து 241 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

மின்தடை ஏற்படாத வகையில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதற்கான வைப்புத்தொகையாக 4 லட்சத்து 6 ஆயிரத்து 810 செலுத்த வேண்டும்.

பணியில் தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு ஒன்றில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டம் பெற்றவர்களை நியமிக்க வேண்டும். வயர்மேன் பணியில் ஐடிஐ முடித்தவர்களை நியமிக்க வேண்டும். தினமும் 8 மணி நேரம் வேலைப் பணியாக வழங்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Last Updated : Dec 18, 2020, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.