ETV Bharat / city

CCTV: நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து!

மோட்டார் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

author img

By

Published : Jul 1, 2022, 7:40 PM IST

இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: சிசிடிவி காட்சி
இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: சிசிடிவி காட்சி

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் சந்திப்பில், தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் மீது பின்னால் வந்த கனரக லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் சென்னை தியாகராயநகர் சித்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சாமிவேல் (50) என்பதும்; இவர் தனியார் மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: சிசிடிவி காட்சி

பின்னர் இன்று(ஜூலை 1) காலை படப்பையில் உள்ள தனது வீட்டிற்குச்சென்று திரும்பி, தியாகராயநகருக்கு சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

டிப்பர் லாரி ஓட்டுநரைக் கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: புரட்சி பயணத்தில் சசிகலா.. பினாமி சொத்துக்கள் முடக்கம்

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் சந்திப்பில், தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் மீது பின்னால் வந்த கனரக லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் சென்னை தியாகராயநகர் சித்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சாமிவேல் (50) என்பதும்; இவர் தனியார் மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: சிசிடிவி காட்சி

பின்னர் இன்று(ஜூலை 1) காலை படப்பையில் உள்ள தனது வீட்டிற்குச்சென்று திரும்பி, தியாகராயநகருக்கு சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

டிப்பர் லாரி ஓட்டுநரைக் கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: புரட்சி பயணத்தில் சசிகலா.. பினாமி சொத்துக்கள் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.