ETV Bharat / city

வள்ளுவர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்! - வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் குல மக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருவள்ளுவர் சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வள்ளுவர் குல மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

protest
author img

By

Published : Nov 17, 2019, 4:41 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலையை அவமதித்தவரை கைது செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆனந்தன், "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும். சிலை அவமதிக்கப்பட்ட பின்பு காலதாமதமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காரணம் காவல்துறை அனுமதி மறுத்ததுதான்.

எங்கள் இனத்தை வைத்து அரசியல் செய்வார்கள், ஆனால் எங்கள் மக்களை அரசு கண்டுகொள்வதில்லை. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருவள்ளுவர் சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

வள்ளுவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆனந்தன் பேட்டி

இதையும் படியுங்க: ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்கள் - மறைக்கப்பட்ட உண்மையைக் கூறும் 'மெரினா புரட்சி'

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலையை அவமதித்தவரை கைது செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆனந்தன், "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும். சிலை அவமதிக்கப்பட்ட பின்பு காலதாமதமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காரணம் காவல்துறை அனுமதி மறுத்ததுதான்.

எங்கள் இனத்தை வைத்து அரசியல் செய்வார்கள், ஆனால் எங்கள் மக்களை அரசு கண்டுகொள்வதில்லை. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருவள்ளுவர் சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

வள்ளுவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆனந்தன் பேட்டி

இதையும் படியுங்க: ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்கள் - மறைக்கப்பட்ட உண்மையைக் கூறும் 'மெரினா புரட்சி'

Intro:வள்ளுவர் சிலையை அவமதித்த வரை கைது செய்
வல்லுவர் குல மக்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்


Body:சென்னை,
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவரை கைது செய்ய வேண்டும் என சென்னையில் வள்ளுவர் குல மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் சிலையை அவமதித்த வரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய மக்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த வரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளூர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வள்ளுவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆனந்தன், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளூர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும். சிலை அமைக்கப்பட்ட பின்பு காலதாமதமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காரணம் காவல்துறை அனுமதி பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
திருவள்ளுவர் எங்களின் முப்பாட்டன் எனவும், அவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறை நூல் என அவர் தெரிவித்தார். எங்களுக்கு வள்ளுவன் என அரசாங்கம் ஜாதி சான்றிதழ் தருகிறது. ஆனால் எங்கள் குல மக்களை அரசு கண்டுகொள்வதில்லை.

திருவள்ளுவர் இந்து என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் பூணூல் அணிந்தும், திருநீர் அணிந்தும் இருந்தார்.
திருவள்ளுவரை அவமதித்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து திருவள்ளூர் சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.