ETV Bharat / city

நுழைவுத் தேர்வுகள் ரத்தானால் மாணவர்கள் மகிழ்வார்கள் - ராமதாஸ்

சென்னை: அனைத்துவகையான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்தால்தான் பள்ளிகள் கோபமற்ற மகிழ்ச்சியான பகுதிகளாகமாறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Dec 29, 2019, 11:04 PM IST

Ramadoss latest
Ramadoss latest

சமீபத்தில் பள்ளி நிர்வாகங்களுக்கு சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில், "பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக மாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிபிஎஸ்சி அமைப்பின் இந்த நோக்கம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும்கூட, கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல், இது போன்ற அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது. பள்ளி வளாகங்களில் கோபம் ஏற்படுவதற்கானக் காரணங்களை அகற்றுவதுதான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமே தவிர, கோபத்தைக் கட்டுப்படுத்துவது முழுமையாக பயனளிக்காது.

குழந்தைகளை மழலையர் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குவதற்காக முதல்நாள் இரவுமுதல் பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்குவதில் இருந்துதான் கல்வியின் சீரழிவு தொடங்குகிறது. மழலையர் வகுப்புகளிலும், தொடக்கக் கல்வியிலும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள், 12ஆம் வகுப்புக்கு பிறகு எழுதவிருக்கும் பல்வேறு தேர்வுகள் என மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் ஆயிரம் இருக்கிறது.

(தாய்மொழியில் கல்வி வழங்குவதை தவிர்த்து விட்டு, ஆங்கில வழியில் கல்வி வழங்குவதை விட மோசமான தண்டனையை மாணவர்களுக்கு வழங்கமுடியாது. அனிச்சையாக வரும் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் அடக்கிக்கொண்டு, தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு மொழியில் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமையானது?)

உலகிலேயே தரமான, சிறப்பான கல்வி பின்லாந்தில் வழங்கப்படுகிறது. அங்கு மழலையர் கல்வி இல்லை, ஆங்கில வழிக் கல்வி இல்லை, அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயமோ, தரவரிசையோ இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் அங்கு படிப்பவர்கள் புத்திசாலிகளாகவும், சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால், இவ்வளவு இருந்தும் இந்தியக் கல்வி முறையில் பயில்பவர்கள் ஏட்டு சுரைக்காய்களாக மட்டும்தான் விளங்குகின்றனர்.

சுருக்கமாக கூற வேண்டுமானால், மலர்களாகக் கையாளப்பட வேண்டிய மாணவர்களை, மனிதர்களாகக் கூட கையாளாமல், மதிப்பெண் இயந்திரங்களாக கையாளுவதுதான் அனைத்திற்கும் காரணம். இந்தநிலையை மாற்ற வேண்டும். அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும். கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்றவேண்டும். அதன்மூலமாக தான் பள்ளிகளைக் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'மாணவர்களைத் தூண்டிவிட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் திமுக...!'

சமீபத்தில் பள்ளி நிர்வாகங்களுக்கு சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில், "பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக மாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிபிஎஸ்சி அமைப்பின் இந்த நோக்கம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும்கூட, கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல், இது போன்ற அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது. பள்ளி வளாகங்களில் கோபம் ஏற்படுவதற்கானக் காரணங்களை அகற்றுவதுதான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமே தவிர, கோபத்தைக் கட்டுப்படுத்துவது முழுமையாக பயனளிக்காது.

குழந்தைகளை மழலையர் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குவதற்காக முதல்நாள் இரவுமுதல் பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்குவதில் இருந்துதான் கல்வியின் சீரழிவு தொடங்குகிறது. மழலையர் வகுப்புகளிலும், தொடக்கக் கல்வியிலும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள், 12ஆம் வகுப்புக்கு பிறகு எழுதவிருக்கும் பல்வேறு தேர்வுகள் என மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் ஆயிரம் இருக்கிறது.

(தாய்மொழியில் கல்வி வழங்குவதை தவிர்த்து விட்டு, ஆங்கில வழியில் கல்வி வழங்குவதை விட மோசமான தண்டனையை மாணவர்களுக்கு வழங்கமுடியாது. அனிச்சையாக வரும் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் அடக்கிக்கொண்டு, தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு மொழியில் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமையானது?)

உலகிலேயே தரமான, சிறப்பான கல்வி பின்லாந்தில் வழங்கப்படுகிறது. அங்கு மழலையர் கல்வி இல்லை, ஆங்கில வழிக் கல்வி இல்லை, அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயமோ, தரவரிசையோ இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் அங்கு படிப்பவர்கள் புத்திசாலிகளாகவும், சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால், இவ்வளவு இருந்தும் இந்தியக் கல்வி முறையில் பயில்பவர்கள் ஏட்டு சுரைக்காய்களாக மட்டும்தான் விளங்குகின்றனர்.

சுருக்கமாக கூற வேண்டுமானால், மலர்களாகக் கையாளப்பட வேண்டிய மாணவர்களை, மனிதர்களாகக் கூட கையாளாமல், மதிப்பெண் இயந்திரங்களாக கையாளுவதுதான் அனைத்திற்கும் காரணம். இந்தநிலையை மாற்ற வேண்டும். அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும். கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்றவேண்டும். அதன்மூலமாக தான் பள்ளிகளைக் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'மாணவர்களைத் தூண்டிவிட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் திமுக...!'

Intro:சுமையற்ற, சுகமான கல்வி முறை தான்
மகிழ்ச்சியான பள்ளிகளுக்கு அடிப்படை Body:சுமையற்ற, சுகமான கல்வி முறை தான்
மகிழ்ச்சியான பள்ளிகளுக்கு அடிப்படை


சென்னை,

பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளின் வளாகங்களும் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்று சிபிஎஸ்சி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நோக்கம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் கூட, கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல் இது போன்ற அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது.

பள்ளி நிர்வாகங்களுக்கு இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. பள்ளிகளில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. அனைவரும் மூச்சுப்பயிற்சிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிக்குழந்தைகள் அனுபவிக்கும் அச்சம், மனவேதனை, எதிர்கொள்ளும் அவமானம், அவமரியாதை ஆகிய அனைத்துக்கும் பள்ளி வளாகங்களில் பல திசைகளில் இருந்தும் அவர்கள் மீது ஏவப்படும் கோபம் தான் காரணம் எனும் நிலையில், பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக மாற்ற வேண்டும் என்ற சி.பி.எஸ்.இ. யின் முடிவு பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆனால், பள்ளி வளாகங்களில் கோபம் ஏற்படுவதற்காக காரணிகளை அகற்றுவது தான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமே தவிர, கோபத்தை கட்டுப்படுத்துவது முழுமையாக பயனளிக்காது. அது ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கும் செயலாகவே அமையும்.

சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் . பள்ளி வளாகங்களை கோபமற்றவையாகவும், மகிழ்ச்சி நிறைந்தவையாகவும் மாற்றுவதற்கு இது தான் சிறந்த வழியாகும். ஆனால், இன்றையக் கல்வி அப்படியா இருக்கிறது? என்று அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குழந்தைகளை முன்-மழலையர் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குவதற்காக முதல் நாள் இரவு முதல் பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்குவதில் இருந்து தான் கல்விச் சீரழிவு தொடங்குகிறது. மழலையர் வகுப்புகளிலும், தொடக்கக்கல்வியிலும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள், 12 ம் வகுப்புக்கு பிறகு எழுதவிருக்கும் நீட், ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் ஆகியவற்றுக்காக ஆறாம் வகுப்பிலிருந்தே கூடுதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் எடையை விட அதிக எடை கொண்ட புத்தகங்கள் என மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஆயிரம் விஷயங்களை வைத்துக் கொண்டு பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற வேண்டும் என்றால் அது ஏட்டில் மட்டுமே சாத்தியமாகும்.நடைமுறையில் சாத்தியம் ஆகாது.

தாய்மொழியில் கல்வி வழங்குவதை தவிர்த்து விட்டு, ஆங்கில வழியில் கல்வி வழங்குவதை விட மோசமான தண்டனையை மாணவர்களுக்கு வழங்க முடியாது. அனிச்சையாக வரும் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் அடக்கிக் கொண்டு, தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு மொழியில் பேச வேண்டும்; சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமையானது?
பள்ளிகள் கோபமற்ற, மகிழ்ச்சியாக பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்கான தீர்வு கல்வி முறையை மாற்றியமைப்பதில் தான் இருக்கிறதே தவிர, வெறுமனே சுற்றறிக்கை அனுப்புவதில் இல்லை.

உலகில் தரமான, சிறப்பான கல்வி பின்லாந்தில் தான் வழங்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள பள்ளி வளாகங்கள் தான் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக திகழ்கின்றன. இதற்குக் காரணம் அங்கு மழலையர் கல்வி இல்லை, ஆங்கில வழிக் கல்வி இல்லை, அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயமோ, தரவரிசையோ இல்லை, வீட்டுப் பாடம் இல்லை, நுழைவுத்தேர்வுகள் இல்லை என்பது தான். இவ்வளவுக்குப் பிறகும் அங்கு படிப்பவர்கள் புத்திசாலிகளாகவும், சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால், இவ்வளவு இருந்தும் இந்தியக் கல்வி முறையில் பயில்பவர்கள் ஏட்டு சுரைக்காய்களாக மட்டும் தான் விளங்குகின்றனர்.

சுருக்கமாக கூற வேண்டுமானால், மலர்களாக கையாளப்பட வேண்டிய மாணவர்களை, மனிதர்களாகக் கூட கையாளாமல், மதிப்பெண் எந்திரங்களாக கையாளுவது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டும். அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும். அதன்மூலமாகத் தான் பள்ளிகளை கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும் என அதில் கூறியுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.