சென்னை: அரசு அறிவித்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருமண நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என வழிகாட்டு நெறிமுறை உள்ளது.
தற்போது இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வசதியாக புதிய இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,
- திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும்
- ஒரே பதிவில் அனைத்து வண்டிகளுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.
- திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள நபர் (விண்ணப்பதாரர் - மணமகள், மணமகன், தாய், தந்தை) ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ள வேண்டும்.
- விண்ணப்பதாரரின் பெயர் பத்திரிக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அரசாங்க அடையாள அட்டை (ஆதார், குடும்ப அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட்) தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.