சென்னை: தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா தற்போது டெல்லி காவல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக விருகம்பாக்கம் நடேசன் நகர் தயிஷா குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டில் தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரான மதுசூதன ரெட்டி(69) என்பவர், கடந்த நான்கு வருடமாக குடும்பத்துடன் வாடகைக்கு இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தொழிலதிபர் மதுசூதன ரெட்டி 14வது மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
அதன் பேரில் விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மதுசூதன ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மதுசூதன ரெட்டி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுமார் 35,000 பாம்புகளை பிடித்தவர் பாம்பு கடித்து மரணம்