ETV Bharat / city

தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பாராட்டு விழா... - minister pandiyarajan speech in tamilisai Appreciation Ceremony

சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பாண்டியராஜன், சரத்குமார் ஆகியோர் பாராட்டு உரை வழங்கினர்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பாராட்டு விழா
author img

By

Published : Oct 6, 2019, 10:40 PM IST

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டு பாராட்டு உரை வழங்கினர்.

தமிழிசையின் பாராட்டு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், சரத்குமார் பேச்சு

இந்த விழாவில் பேசிய சரத்குமார், "தமிழிசையின் உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் ஆளுநர் பதவி. அவரை நான் உழைப்பாளியாக பார்த்திருக்கிறேன். அவரின் உழைப்பு தெலங்கானா மாநிலத்தை உயர்த்தும். தெலங்கானா மாநிலம் அறிவு, ஆற்றல், திறமை ஆகிய மூன்றும் முழுமையாக உள்ள ஒருவரை ஆளுநராக பெற்றிருக்கிறது. குக்கிராமங்களிலும் தாமரை சின்னத்தை எடுத்துச் சென்ற பெருமை அவரையே சேரும்" என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "தமிழிசைக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்புதான் இந்த ஆளுநர் பதவி. அவர் 20 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. உயர்கல்வி, பண்பாட்டு தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை அவர் உருவாக்க வேண்டும். தெலுங்கானா தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட தமிழிசை முன்வர வேண்டும். அதன்மூலம் தெலுங்கு - தமிழ் இணைப்பு பாலம் வலுப்பெறும். மோடியும் அமித்ஷாவும் தொலைநோக்கு பார்வையோடுதான் தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கியுள்ளனர். தற்போது அவருக்கு இருக்கும் வரவேற்பு ஆறு மாதத்திற்கு முன்னர் இருந்திருந்தால், அவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பார்" என்று கூறினார்.

இதையும் படியுங்க:

துணிச்சலுக்கு ஜெயலலிதா; தமிழ் உணர்வுக்கு கருணாநிதி - புகழ்ந்த தெலங்கானா ஆளுநர்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டு பாராட்டு உரை வழங்கினர்.

தமிழிசையின் பாராட்டு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், சரத்குமார் பேச்சு

இந்த விழாவில் பேசிய சரத்குமார், "தமிழிசையின் உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் ஆளுநர் பதவி. அவரை நான் உழைப்பாளியாக பார்த்திருக்கிறேன். அவரின் உழைப்பு தெலங்கானா மாநிலத்தை உயர்த்தும். தெலங்கானா மாநிலம் அறிவு, ஆற்றல், திறமை ஆகிய மூன்றும் முழுமையாக உள்ள ஒருவரை ஆளுநராக பெற்றிருக்கிறது. குக்கிராமங்களிலும் தாமரை சின்னத்தை எடுத்துச் சென்ற பெருமை அவரையே சேரும்" என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "தமிழிசைக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்புதான் இந்த ஆளுநர் பதவி. அவர் 20 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. உயர்கல்வி, பண்பாட்டு தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை அவர் உருவாக்க வேண்டும். தெலுங்கானா தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட தமிழிசை முன்வர வேண்டும். அதன்மூலம் தெலுங்கு - தமிழ் இணைப்பு பாலம் வலுப்பெறும். மோடியும் அமித்ஷாவும் தொலைநோக்கு பார்வையோடுதான் தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கியுள்ளனர். தற்போது அவருக்கு இருக்கும் வரவேற்பு ஆறு மாதத்திற்கு முன்னர் இருந்திருந்தால், அவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பார்" என்று கூறினார்.

இதையும் படியுங்க:

துணிச்சலுக்கு ஜெயலலிதா; தமிழ் உணர்வுக்கு கருணாநிதி - புகழ்ந்த தெலங்கானா ஆளுநர்

Intro:Body:தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில் பாராட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் நடைப்பெற உள்ளது.

இதில் அமைச்சர் பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பாராட்டு உரை வழங்க உள்ளனர்.

இந்த விழாவில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேசுகையில், ஆளுநர் தமிழிசையை ஒரு உழைப்பாளியாக பார்த்துள்ளேன். அவர் செய்யும் எல்லா செயலிலும் உழைப்பு இருக்கும்.

உங்களை எதற்காக அங்கு அனுப்பியுள்ளனர் என்பது உங்களுக்கும், உங்கள் தலைமைக்கும் தெரியும். அரசியல் பேசவில்லை. தெலுங்கானா மாநிலத்தை உயர்த்த உங்கள் உழைப்பு இருக்கும் என கூறுகிறேன்.

குக் கிராமங்களிலும் தாமரை எடுத்து சென்றுள்ள பெருமை ஆளுநர் தமிழிசைக்கு உண்டு என தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு:

தமிழ், தெலுங்கு சமுதாயத்திற்கு எந்த அளவு பிணைப்பு இருக்க வேண்டுமோ அது தற்போது இல்லை.

உலகம் முழுவதும் தமிழை விட தெலுங்கு மொழியை ஒன்றை கோடி மக்கள் அதிகம் பேசுகிறார்கள்...

தெலுங்கானா தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும்.அதன் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தெலுங்கு தமிழ் இணைப்பு பாலம் வலுப்பெறும்.

தமிழ் தெலுங்கு ஒரு காலத்தில்
தந்தை தமையன் போன்ற உறவு இருந்தது போல் தற்போது உருவாகும். இது போல் தொலைநோக்கு பார்வையோடு மோடி, அமித்ஷா தங்களுக்கு ஆளுநர் பதவி வழங்கி உள்ளார் என்று என்னுகின்றேன்.

தற்போது வழங்கி வரும் ஆதரவை நீங்கள் ஆறு மாதம் முன்பு வழங்கியிருந்தால் அவர் மத்திய அமைச்சரவையில் முக்கியமான பதவியில் இருந்திருப்பார்.

தற்போது ஆளுநர் தமிழிசைக்கு இருக்கும் வரவேற்பு 6 மாதத்திற்கு முன்னர் இருந்திருந்தால் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பார் என தெரிவித்தார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில் நான் எப்போது தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றனோ அப்போது முதல் தெலுங்கானாவில் தமிழ் ஒலித்து கொண்டிருக்கிறது. அதே போல் எப்போதெல்லாம் நான் தமிழகம் வருகிறேனோ அப்போதெல்லாம் தெலுங்கு இங்கு ஒலிக்கிறது. இதுவே இரு மொழியின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காட்டுகிறது.

தெலுங்கு தமிழுக்கும் பாலம் இருக்க வேண்டும் என கூறிய அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை சிறப்பானது அது வரவேற்கதக்க
ஒன்று அது.

ஒருவருக்கு ஒரு பொறுப்பு கிடைத்த உடன் தமிழகமே கொண்டாடியது தமிழிசைக்கு கிடைத்த பின்பு தான். அனைவரும் உலைக்கலாம் ஆனால் உழைப்புக்கு மரியாதை கொடுப்பது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான்.

பணமதிப்பிழப்பு செய்ததற்கு ஒரு தலைவர் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என்று பிரதமர் மோடி கூறும் போது அவர் உத்தர் பிரதேஷம், மஹாராஷ்டிரா என மற்ற மாநில தலைவரை அவர் கூறவில்லை அவர் கூறியது தலைவர் காமராஜரை.

தமிழிசைக்கு ஒய்வே கிடையாது. என் வாழ்வில் புல் ஸ்டாப் கிடையாது வெறும் கமா தான்.

எனக்கு புரோட்டோக்கால் என்று சிறப்பு நாற்காலி போடுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அனைவருக்கும் சிறப்பு நாற்காலி போடுங்கள் என்று கூறிவிட்டேன் என தெரிவித்தார்..
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.