ETV Bharat / city

மதுவில் மதுரைதான் முதலிடம்; சூடமேற்றி விற்பனைக்கும் சூடேற்றிய மதுப்பிரியர்கள்!

author img

By

Published : Jun 15, 2021, 2:03 PM IST

Updated : Jun 15, 2021, 2:37 PM IST

ஊரடங்குத் தளர்விற்குப் பின் நேற்று (ஜூன் 14) மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதை நெட்டிசன் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

மதுவில் மதுரைதான் முதலிடம்
மதுவில் மதுரைதான் முதலிடம்

மதுரை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்து, நோய்த்தொற்றுப் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைத் தவிர பிற அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் (ஜூன் 14) டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

மதுரைதான் பெஸ்ட்

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகப்பட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ. 42.96 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 38.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 33.65 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்திலும் சென்னை மாவட்டமே முதன்மையாக இருந்துவரும் நிலையில், மதுப்பிரியர்களின் எண்ணிக்கையிலும், மதுவிற்பைனையிலும் சென்னையை விட மதுரை தாண்டிவிட்டது. இதை சமூக வலைதளங்களில் மதுப்பிரியர்கள் கொண்டாடி வருகின்றனர் .

இதையும் படிங்க: மதுரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஓ.பி.எஸ் - நடந்தது என்ன?

மதுரை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்து, நோய்த்தொற்றுப் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைத் தவிர பிற அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் (ஜூன் 14) டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

மதுரைதான் பெஸ்ட்

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகப்பட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ. 42.96 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 38.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 33.65 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்திலும் சென்னை மாவட்டமே முதன்மையாக இருந்துவரும் நிலையில், மதுப்பிரியர்களின் எண்ணிக்கையிலும், மதுவிற்பைனையிலும் சென்னையை விட மதுரை தாண்டிவிட்டது. இதை சமூக வலைதளங்களில் மதுப்பிரியர்கள் கொண்டாடி வருகின்றனர் .

இதையும் படிங்க: மதுரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஓ.பி.எஸ் - நடந்தது என்ன?

Last Updated : Jun 15, 2021, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.