ETV Bharat / city

கரோனா வைரஸ் - சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து

author img

By

Published : Feb 6, 2020, 6:29 PM IST

Updated : Mar 17, 2020, 5:55 PM IST

சென்னை: கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

secretary
secretary

சென்னையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தனியார் மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று அறிவுரை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், ”கரோனா வைரஸ் குறித்து கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு, பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம் மூலம் தமிழகம் வந்த 15,000 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 1,351 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 11 பேர் மருத்துவமனையில் தனி அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா - சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து

பொதுமக்கள் தங்களுடைய நலனில் கவனம் செலுத்தவேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது போல், தொடர்வண்டியில் வரும் பயணிகளை பரிசோதனை செய்யவும், தெற்கு தொடர்வண்டித்துறைக்கு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படும்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதுவரை 34 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மற்றவர்களுக்குரிய முடிவுக்காக காத்திருக்கிறோம். நிலவேம்பு கசாயத்தால் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் எனக் கூற முடியாது “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பு: மூன்றாவதாக ஒருவருக்குப் பரிசோதனை

சென்னையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தனியார் மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று அறிவுரை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், ”கரோனா வைரஸ் குறித்து கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு, பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம் மூலம் தமிழகம் வந்த 15,000 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 1,351 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 11 பேர் மருத்துவமனையில் தனி அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா - சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து

பொதுமக்கள் தங்களுடைய நலனில் கவனம் செலுத்தவேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது போல், தொடர்வண்டியில் வரும் பயணிகளை பரிசோதனை செய்யவும், தெற்கு தொடர்வண்டித்துறைக்கு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படும்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதுவரை 34 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மற்றவர்களுக்குரிய முடிவுக்காக காத்திருக்கிறோம். நிலவேம்பு கசாயத்தால் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் எனக் கூற முடியாது “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பு: மூன்றாவதாக ஒருவருக்குப் பரிசோதனை

Last Updated : Mar 17, 2020, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.