சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லத்தில் இருந்து கோட்டையை நோக்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பாக பேரணி நடைபெற்றது. இதில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
- போக்குவரத்து ஊழியர்களின் காப்பீட்டுத் தொகை, 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே நடத்த வேண்டும்.
- போக்குவரத்து கழகங்கள் செலவு செய்த தொழிலாளர்களின் பணம் ரூ.11,000 கோடியை திருப்பி வழங்க வேண்டும்.
- தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.
- ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.
- பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
- போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்க அரசு வழங்க வேண்டும்.
- போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த வேண்டும்.14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி சிஐடியு பேரணி
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்து.
இதையும் படிங்க: 'காவல்நிலையத்தில் கைதி உயிரிழப்பு - ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்'