ETV Bharat / city

சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: முன்னாள் கவுன்சிலர் மீது 308 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

author img

By

Published : Sep 17, 2019, 6:00 PM IST

சென்னை: சுபஸ்ரீ உயிரிழப்பு வழக்கில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் மீது முன்பிணையில் வெளிவர முடியாத 308 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

subashri accident

சென்னையில் கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக பேனர் அறுந்து அவர் மீது விழுந்தது. அதில் நிலைதடுமாறி வண்டியிலிருந்து விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அரசியல் கட்சித் தலைவர்களால் பதாகைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடும்படி செய்தது. இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டிவந்த பிகாரைச் சேர்ந்த மனோஜ் யாதவ் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல் ஐபிசி பிரிவு 279, அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் ஐபிசி பிரிவு 304(அ) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் ஐபிசி 336 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் எளிதில் முன்பிணையில் வெளிவந்து விடுவார் என்பது அதிருப்தியை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது முன்பிணையில் வெளிவரமுடியாத ஐபிசி 308 கொலையாகாத மரணத்தை ஏற்படுத்துதல் என்கிற பிரிவின் கீழ் பரங்கிமலைப் போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேகநாதன் பதாகை வைக்க பயன்படும் இரும்புச் சட்டம் வாடகைக்கு விடும் தொழில் செய்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக பேனர் அறுந்து அவர் மீது விழுந்தது. அதில் நிலைதடுமாறி வண்டியிலிருந்து விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அரசியல் கட்சித் தலைவர்களால் பதாகைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடும்படி செய்தது. இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டிவந்த பிகாரைச் சேர்ந்த மனோஜ் யாதவ் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல் ஐபிசி பிரிவு 279, அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் ஐபிசி பிரிவு 304(அ) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் ஐபிசி 336 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் எளிதில் முன்பிணையில் வெளிவந்து விடுவார் என்பது அதிருப்தியை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது முன்பிணையில் வெளிவரமுடியாத ஐபிசி 308 கொலையாகாத மரணத்தை ஏற்படுத்துதல் என்கிற பிரிவின் கீழ் பரங்கிமலைப் போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேகநாதன் பதாகை வைக்க பயன்படும் இரும்புச் சட்டம் வாடகைக்கு விடும் தொழில் செய்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:சுபஸ்ரீ உயிரிழப்பு வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் உட்பட 2 பேர் மீது ஜாமினில்லா பிரிவின் கீழ் வழக்குப்பதிவு*

சென்னை பள்ளிகரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ எனும் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கடந்த 12 ஆம் தேதி பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில், குரோம்பேட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் வரும்போது திருமண விளம்பரத்திற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த பேனர் அறுந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி விழுந்த சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி ஏறி இறங்கியதில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அரசியல் கட்சி தலைவர்களால் பதாகைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடும்படி செய்தது. இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டிவந்த பீகாரை சேர்ந்த மனோஜ் யாதவ் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல்( IPC279) , அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் (IPC 304(A)) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே போல, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் (IPC336)என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எளிதில் ஜாமீனில் வெளிவந்து விடுவார் என்பது அதிருப்தியை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத (IPC308) கொலையாகாத மரணத்தை ஏற்படுத்துதல் என்கிற பிரிவின் கீழ் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேகநாதன் பதாகை வைக்க பயன்படும் இரும்பு சட்டம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.