தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
அதேசமயம் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. தேர்தலையொட்டி கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “எந்தக் காலத்திலும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. சுழற்சி முறையில் பிரதமர் பதவியை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க தனியாக நெய்தல் படையை உருவாக்குவேன் என்றார். இவ்வாறு அவர்பேசியிருப்பது மீனவ சமுதாய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.