ETV Bharat / city

சென்னையில் ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

author img

By

Published : Mar 3, 2022, 6:46 AM IST

சென்னை விமான நிலையத்தில் ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள 880 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

40-dot-55-lakh-worth-of-smuggled-gold-seized-in-chennai
40-dot-55-lakh-worth-of-smuggled-gold-seized-in-chennai

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று(மார்ச்.2) வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெண் பயணி ஒருவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைந்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அந்த பெண்ணை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்ட பெண் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்தி ஜெயகிருஷ்ணன் என்பதும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 880 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.40.55 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் துபாய், சார்ஜாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விமானங்களில் கடத்திவரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று(மார்ச்.2) வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெண் பயணி ஒருவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைந்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அந்த பெண்ணை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்ட பெண் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்தி ஜெயகிருஷ்ணன் என்பதும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 880 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.40.55 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் துபாய், சார்ஜாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விமானங்களில் கடத்திவரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.