ETV Bharat / city

மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் - ஒரேநாளில் 15,000 பேர் விண்ணப்பம்!

author img

By

Published : Jun 25, 2022, 8:10 PM IST

அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

application
application

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு இன்று (ஜூன் 25) முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாக, வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம். பள்ளியில் படித்த விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் இதுவரை பதினைந்தாயிரம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "நாசா" செல்ல கிடைத்த பணத்தை கழிவறை கட்ட பயன்படுத்திய பள்ளி மாணவியின் கதை - ஈரோடு மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு இன்று (ஜூன் 25) முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாக, வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம். பள்ளியில் படித்த விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் இதுவரை பதினைந்தாயிரம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "நாசா" செல்ல கிடைத்த பணத்தை கழிவறை கட்ட பயன்படுத்திய பள்ளி மாணவியின் கதை - ஈரோடு மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.