ETV Bharat / city

'கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது' - Corona relief fundraising event

கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது என தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

author img

By

Published : May 24, 2021, 7:31 PM IST

சென்னை: அரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் அதிமுக நிர்வாகி தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும், நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டுவருகின்றனர். நியாய விலைக் கடைகளுக்கு அருகே திமுகவினர் பேனர்கள் வைக்கின்றனர். அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலைக் கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்கத் தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது, நிவாரண உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், "தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், அங்கு அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது, பேனர்கள் வைக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. தற்போதைய நிலையும், அப்போதைய நிலையும் வெவ்வேறு" என சுட்டிக்காட்டி வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிவாரண உதவி வழங்கும் போது, அரசை மட்டும் முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆளுங்கட்சி சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

மேலும் நிவாரணம் வழங்குபவர்கள், இந்நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது எனவும், அரசியல் சாயம் கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும் போது கரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

சென்னை: அரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் அதிமுக நிர்வாகி தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும், நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டுவருகின்றனர். நியாய விலைக் கடைகளுக்கு அருகே திமுகவினர் பேனர்கள் வைக்கின்றனர். அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலைக் கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்கத் தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது, நிவாரண உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், "தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், அங்கு அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது, பேனர்கள் வைக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. தற்போதைய நிலையும், அப்போதைய நிலையும் வெவ்வேறு" என சுட்டிக்காட்டி வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிவாரண உதவி வழங்கும் போது, அரசை மட்டும் முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆளுங்கட்சி சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

மேலும் நிவாரணம் வழங்குபவர்கள், இந்நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது எனவும், அரசியல் சாயம் கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும் போது கரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.