ETV Bharat / city

குடும்பத் தலைவிக்கு ரூ.1000: ஜனவரி முதல் விநியோகம்? - பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி

ரேஷன் கடைகளில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 திட்டத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Pongal gift distribution
Pongal gift distribution
author img

By

Published : Dec 17, 2021, 9:57 PM IST

Updated : Dec 18, 2021, 2:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதற்காக ரூ.1,160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பணிகளை காண்காணிக்கவும், முறைபடுத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர்கள், வேளாண்மை இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு விநியோகம் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

குடும்பத்தலைவிக்கு ரூ.1,000

இதனிடையே, 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றத் திட்டத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன. அத்துடன் தற்போதுள்ள நிதி பற்றாக்குறையில், இந்தத் திட்டம் மூலம் 1000 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை வீடுகளில் வசிப்போர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் மட்டுமே இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குடும்பத்தலைவிக்கு ரூ.1,000.. முக்கிய அறிவிப்பு...

சென்னை: தமிழ்நாட்டில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதற்காக ரூ.1,160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பணிகளை காண்காணிக்கவும், முறைபடுத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர்கள், வேளாண்மை இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு விநியோகம் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

குடும்பத்தலைவிக்கு ரூ.1,000

இதனிடையே, 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றத் திட்டத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன. அத்துடன் தற்போதுள்ள நிதி பற்றாக்குறையில், இந்தத் திட்டம் மூலம் 1000 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை வீடுகளில் வசிப்போர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் மட்டுமே இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குடும்பத்தலைவிக்கு ரூ.1,000.. முக்கிய அறிவிப்பு...

Last Updated : Dec 18, 2021, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.