ETV Bharat / city

'பொன் மாணிக்கவேல் சமர்ப்பித்த அறிக்கை குறித்து சிபிசிஐடி விசாரிக்க மனு’

author img

By

Published : Nov 15, 2019, 9:12 PM IST

சென்னை: சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

highcourt

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2018ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகடத்தல் தொடர்பாக 2012-2018 காலக்கட்டத்தில் 26 வழக்குகளைப் பதிவு செய்து, 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1,125 சிலைகள் மீட்கப்பட்டதோடு, 1,106 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதை தடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து எட்டு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், அவைகள் உண்மையிலேயே கடத்தப்பட்ட சிலைகள் தானா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பொன் மாணிக்கவேல் மீட்டதாக கூறப்படும் சிலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களிடம் ஒப்படைக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த அவர், பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தினார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீதான பாலியல் வழக்கு' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2018ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகடத்தல் தொடர்பாக 2012-2018 காலக்கட்டத்தில் 26 வழக்குகளைப் பதிவு செய்து, 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1,125 சிலைகள் மீட்கப்பட்டதோடு, 1,106 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதை தடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து எட்டு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், அவைகள் உண்மையிலேயே கடத்தப்பட்ட சிலைகள் தானா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பொன் மாணிக்கவேல் மீட்டதாக கூறப்படும் சிலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களிடம் ஒப்படைக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த அவர், பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தினார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீதான பாலியல் வழக்கு' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Intro:Body:சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைக்கும்படி சிபிசிஐடி-க்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொரட்டூரை சேர்ந்த சேகர் ராம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல், நீதிமன்றத்தில் பல ஆதாரமற்ற தகவல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018 ம் ஆண்டு பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2012 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரையான காலத்தில், தன் தலைமையிலான குழு 26 வழக்குகளை பதிவு செய்து,102 நபர்களை கைது செய்துள்ளதாகவும்,
1,125 சிலைகளை மீட்டுள்ளதோடு,1,106 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது தடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், அந்த சிலைகள் உண்மையிலேயே கடத்தப்பட்ட சிலைகள் தானா என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை என தெரிய வருவதாகவும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சம்மந்தப்பட்ட சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என கேட்ட போது தகவல்களை கொடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்

பொன் மாணிக்கவேல் மீட்டதாக கூறப்படும் சிலைகளை சம்மந்தப்பட்ட கோவில்களிடம் திருப்பி ஒப்படைக்காமல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திலேயே வைத்திருப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மை குறித்தும் பொன்மணிக்கவேல் நீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை குறித்தும் சந்தேகம் எழுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விரிவான விசாரணை செய்ய வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.