ETV Bharat / city

10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி - அரசாணை வெளியீடு

author img

By

Published : Jan 13, 2021, 5:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இது தொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் இன்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், வகுப்பு ஒன்றுக்கு 25 மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை துறையால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலர், விடுதிகளில் தங்குவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் இன்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், வகுப்பு ஒன்றுக்கு 25 மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை துறையால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலர், விடுதிகளில் தங்குவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.