ETV Bharat / city

ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடங்கள் திறப்பு!

author img

By

Published : Feb 24, 2021, 8:57 PM IST

சென்னை: 1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

cm
cm

தலைமைச் செயலகத்தில் இன்று, வணிகவரித்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், 1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில், 14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர்ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குற்றங்களை தடுக்க கேமரா பொருத்தப்பட்ட அதிநவீன ஜாக்கெட்- துணை ஆணையர் வழங்கினார்!

தலைமைச் செயலகத்தில் இன்று, வணிகவரித்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், 1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில், 14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர்ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குற்றங்களை தடுக்க கேமரா பொருத்தப்பட்ட அதிநவீன ஜாக்கெட்- துணை ஆணையர் வழங்கினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.