ETV Bharat / city

அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நியமனத்திற்கு நேர்முகத் தேர்வு ஏதும் இல்லை!

author img

By

Published : Apr 10, 2022, 11:09 PM IST

தமிழ்நாட்டில் இருக்கும் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ஏதும் இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர்  பணி நியமனத்திற்கு நேர்முகத் தேர்வு ஏதும்  இல்லை!
அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நியமனத்திற்கு நேர்முகத் தேர்வு ஏதும் இல்லை!

சென்னை:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் முழுவதும் முடிவதற்கு 2 மாதங்கள் ஆகும் எனவும், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வது தொடர்பாக 17 ஆயிரத்து 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு ஏதும் இந்தப் பணிநியமனத்திற்கு இல்லை என்பதையும், அனைத்து நடைமுறைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்குப் போட்டி எழுத்துத்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2021 டிசம்பர் 8 ந் தேதி முதல் 13 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவதற்காக விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் குறித்த ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்ற மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் அறிவுறுத்தப்பட்டது.

ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களை போக்குவதற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 17 ஆயிரத்து 58 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 8 விதமான கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க வேண்டியிருந்தது.

Login Id/Password தொடர்பான 2148 கோரிக்கைகளுக்கும், Character and Conduct Certificate பதிவேற்றம் செய்தல் குறித்த 1398 கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பணி அனுபவம் சான்றுக் குறித்த 3465 கோரிக்கைகள், இணைப் பாடக் கல்வித்தகுதிக்கான 7609 கோரிக்கைகள், 2438 கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து 10 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்தபின்னரே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் அடிப்படையில் முதல்கட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தகுதியானவர்கள் பட்டியலும், நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியல் காரணங்களுடன் வெளியிடப்படும். நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மூல ஆவணங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் அனைத்து விபரங்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு ஏதும் இந்தப் பணிநியமனத்திற்கு இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம்.

அனைத்து நடைமுறைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடைபெறும் என்பதையும், இந்தப் பணி முடிவுறுவதற்குக் குறைந்தபட்சம் 2 மாத காலம் ஆகும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:முதுகலை ஆசிரியர் தேர்வின் Answer Key வெளியானது

சென்னை:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் முழுவதும் முடிவதற்கு 2 மாதங்கள் ஆகும் எனவும், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வது தொடர்பாக 17 ஆயிரத்து 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு ஏதும் இந்தப் பணிநியமனத்திற்கு இல்லை என்பதையும், அனைத்து நடைமுறைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்குப் போட்டி எழுத்துத்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2021 டிசம்பர் 8 ந் தேதி முதல் 13 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவதற்காக விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் குறித்த ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்ற மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் அறிவுறுத்தப்பட்டது.

ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களை போக்குவதற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 17 ஆயிரத்து 58 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 8 விதமான கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க வேண்டியிருந்தது.

Login Id/Password தொடர்பான 2148 கோரிக்கைகளுக்கும், Character and Conduct Certificate பதிவேற்றம் செய்தல் குறித்த 1398 கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பணி அனுபவம் சான்றுக் குறித்த 3465 கோரிக்கைகள், இணைப் பாடக் கல்வித்தகுதிக்கான 7609 கோரிக்கைகள், 2438 கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து 10 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்தபின்னரே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் அடிப்படையில் முதல்கட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தகுதியானவர்கள் பட்டியலும், நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியல் காரணங்களுடன் வெளியிடப்படும். நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மூல ஆவணங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் அனைத்து விபரங்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு ஏதும் இந்தப் பணிநியமனத்திற்கு இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம்.

அனைத்து நடைமுறைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடைபெறும் என்பதையும், இந்தப் பணி முடிவுறுவதற்குக் குறைந்தபட்சம் 2 மாத காலம் ஆகும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:முதுகலை ஆசிரியர் தேர்வின் Answer Key வெளியானது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.