ETV Bharat / city

சென்னை மாநகராட்சியுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற உத்தரவு

author img

By

Published : Nov 25, 2020, 11:04 AM IST

சென்னை: மாநகராட்சியில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் பேனர்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Chennai corporation commissioner prakash
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இன்று (நவ. 25) மதியம் 12 மணிக்குள் அனைத்து இடங்களிலும் உள்ள பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை மண்டல அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன் உடனடியாக அகற்ற வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுப்படி வைத்திருக்கும் பேனர்களையும் அவசர நிலையாக அகற்றப்பட வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்து காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 26 மரங்கள் சாய்ந்தன

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இன்று (நவ. 25) மதியம் 12 மணிக்குள் அனைத்து இடங்களிலும் உள்ள பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை மண்டல அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன் உடனடியாக அகற்ற வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுப்படி வைத்திருக்கும் பேனர்களையும் அவசர நிலையாக அகற்றப்பட வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்து காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 26 மரங்கள் சாய்ந்தன

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.