ETV Bharat / city

சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு

author img

By

Published : Sep 8, 2021, 4:58 PM IST

சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

சென்னை: சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் வெளியிட்டுள்ள 17 புதிய அறிவிப்புகள் வருமாறு:

  • 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும்.
  • 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும்.
  • 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.
  • சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கு வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  • சிறுபான்மையினர் நல விடுதி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுவரும் பல்வகைச் செலவின தொகை இருமடங்காக ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தி வழங்கப்படும்.
  • உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
  • சிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
  • தேனி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் விடுதிக்குச் சொந்தக் கட்டடம் மூன்று கோடியே 47 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
  • ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு அருட்சகோதரிகள் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.
  • சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியருக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (புத்த பூர்ணிமா மகாவீரர் ஜெயந்தி பக்ரீத் ரம்ஜான் கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்கப்படும்.
  • உலமாக்கள், பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் பயனடையும் பொருட்டு அவர் வாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 553 மிதிவண்டிகள் நான்கு கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
  • அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் தொடங்கப்படும்.
  • வக்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் சகாய தொகை விகிதத்திற்கு ஏற்ப வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்.
  • தமிழ்நாடு வக்பு வாரியம் தனது பணிகளைத் திறம்பட மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு வக்பு வாரிய நிலத்தில் புதிதாக கட்டடம் கட்டப்படும்.
  • தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வகுப்புகளைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்குள்பட்ட சொந்த அலுவலக கட்டடம் இல்லாத மேற்கு சரக அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்தும்பொருட்டு சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் புதிய பணி தளங்களுடன்கூடிய மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் ஒரு கோடியே 25 லட்சத்து 5,000 ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டுவருவதைப் போன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்!

சென்னை: சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் வெளியிட்டுள்ள 17 புதிய அறிவிப்புகள் வருமாறு:

  • 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும்.
  • 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும்.
  • 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.
  • சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கு வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  • சிறுபான்மையினர் நல விடுதி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுவரும் பல்வகைச் செலவின தொகை இருமடங்காக ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தி வழங்கப்படும்.
  • உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
  • சிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
  • தேனி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் விடுதிக்குச் சொந்தக் கட்டடம் மூன்று கோடியே 47 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
  • ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு அருட்சகோதரிகள் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.
  • சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியருக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (புத்த பூர்ணிமா மகாவீரர் ஜெயந்தி பக்ரீத் ரம்ஜான் கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்கப்படும்.
  • உலமாக்கள், பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் பயனடையும் பொருட்டு அவர் வாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 553 மிதிவண்டிகள் நான்கு கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
  • அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் தொடங்கப்படும்.
  • வக்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் சகாய தொகை விகிதத்திற்கு ஏற்ப வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்.
  • தமிழ்நாடு வக்பு வாரியம் தனது பணிகளைத் திறம்பட மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு வக்பு வாரிய நிலத்தில் புதிதாக கட்டடம் கட்டப்படும்.
  • தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வகுப்புகளைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்குள்பட்ட சொந்த அலுவலக கட்டடம் இல்லாத மேற்கு சரக அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்தும்பொருட்டு சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் புதிய பணி தளங்களுடன்கூடிய மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் ஒரு கோடியே 25 லட்சத்து 5,000 ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டுவருவதைப் போன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.