ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Jan 25, 2022, 7:13 PM IST

Updated : Jan 25, 2022, 7:23 PM IST

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது எனவும்; அதனை நடத்த தடையில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா 3ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒரு நாளைக்கு 25,000 பேருக்குத் தொற்று உறுதி என அறிக்கை வருவதால், கடந்த 15 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதியானவர்களின் எண்ணிக்கை, ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக வாதிட்டனர்.

அரசின் கடமை

தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கச் செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலைப் பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொதுச் சுகாதாரத்தைப் பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

ஏற்கெனவே 5ஆண்டுகள் தேர்தல் நடத்தாத நிலையில், தற்போது நடத்த அவசரமில்லை எனவும் கரோனா மூன்றாவது அலை தணியும் வரை காத்திருக்கலாம் எனவும்;

திருமணம், இறுதிச்சடங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் எனவும் குடியரசு தினத்தை ஒட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபைக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.

தேர்தல் கட்டாயம்

பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், முதியோர், கரோனா பாதித்தவர்களுக்குத் தேர்தலில் பங்களிக்க வகை செய்யப்பட்டதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இதுபோன்ற விதிகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்போவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

அரசியல் சட்டத்தைப் பின்பற்றத் தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

கரோனா நெறிமுறைகள்

2 % பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பரப்புரைக்குச் செல்லும் வேட்பாளர் மூன்று பேருக்கு மேல் செல்லக் கூடாது என கரோனா தடுப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்படவேண்டும் எனவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும்; மாநில அரசுடன் கலந்து பேசி தான் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

நீதிபதிகள் விசாரணை

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கும்படி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

மேலும் அடிப்படை உரிமை, சட்ட உரிமைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்றாலும், நீதித்துறை ஒழுங்கு படி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என விளக்கம் அளித்தனர்.

மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரலாம் என்றும், அதற்கு எந்த தடையும் இல்லை என்றும், மாநிலத் தேர்தல் ஆணையம் தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட எவர் வேண்டுமானாலும் அங்கே அணுகலாம் என்றும், ஏற்கெனவே கரோனா தடுப்பு விதிகளைக் கடந்த டிசம்பர் 10ஆம் தேதியே மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தலைத் தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையம் கோரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், தேர்தல் நடத்துவதில் தாமதத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனுதாரர்கள் வாதத்தை ஏற்றுத் தேர்தலைத் தள்ளிவைக்க முடியாது என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பரப்புரைக்குக் கட்டுப்பாடுகள், தனிமனித விலகல் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றை முறையாகப் பின்பற்ற அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு

வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தேர்தலைத் தள்ளிவைக்கக் கூடாது என்ற மாநில அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

விதிமீறல் இருந்தால் நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி வழக்குகளை முடித்துவைத்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. அதைத் தொடரக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளைத் தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குப் பின் வழக்குகளை விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பொழுதுபோக்கு பூங்கா விதிகள் உள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கரோனா 3ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒரு நாளைக்கு 25,000 பேருக்குத் தொற்று உறுதி என அறிக்கை வருவதால், கடந்த 15 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதியானவர்களின் எண்ணிக்கை, ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக வாதிட்டனர்.

அரசின் கடமை

தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கச் செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலைப் பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொதுச் சுகாதாரத்தைப் பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

ஏற்கெனவே 5ஆண்டுகள் தேர்தல் நடத்தாத நிலையில், தற்போது நடத்த அவசரமில்லை எனவும் கரோனா மூன்றாவது அலை தணியும் வரை காத்திருக்கலாம் எனவும்;

திருமணம், இறுதிச்சடங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் எனவும் குடியரசு தினத்தை ஒட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபைக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.

தேர்தல் கட்டாயம்

பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், முதியோர், கரோனா பாதித்தவர்களுக்குத் தேர்தலில் பங்களிக்க வகை செய்யப்பட்டதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இதுபோன்ற விதிகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்போவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

அரசியல் சட்டத்தைப் பின்பற்றத் தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

கரோனா நெறிமுறைகள்

2 % பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பரப்புரைக்குச் செல்லும் வேட்பாளர் மூன்று பேருக்கு மேல் செல்லக் கூடாது என கரோனா தடுப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்படவேண்டும் எனவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும்; மாநில அரசுடன் கலந்து பேசி தான் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

நீதிபதிகள் விசாரணை

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கும்படி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

மேலும் அடிப்படை உரிமை, சட்ட உரிமைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்றாலும், நீதித்துறை ஒழுங்கு படி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என விளக்கம் அளித்தனர்.

மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரலாம் என்றும், அதற்கு எந்த தடையும் இல்லை என்றும், மாநிலத் தேர்தல் ஆணையம் தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட எவர் வேண்டுமானாலும் அங்கே அணுகலாம் என்றும், ஏற்கெனவே கரோனா தடுப்பு விதிகளைக் கடந்த டிசம்பர் 10ஆம் தேதியே மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தலைத் தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையம் கோரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், தேர்தல் நடத்துவதில் தாமதத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனுதாரர்கள் வாதத்தை ஏற்றுத் தேர்தலைத் தள்ளிவைக்க முடியாது என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பரப்புரைக்குக் கட்டுப்பாடுகள், தனிமனித விலகல் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றை முறையாகப் பின்பற்ற அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு

வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தேர்தலைத் தள்ளிவைக்கக் கூடாது என்ற மாநில அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

விதிமீறல் இருந்தால் நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி வழக்குகளை முடித்துவைத்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. அதைத் தொடரக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளைத் தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குப் பின் வழக்குகளை விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பொழுதுபோக்கு பூங்கா விதிகள் உள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி

Last Updated : Jan 25, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.