ETV Bharat / city

பள்ளிகளில் மதமாற்றம்... தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு... - forced religious conversions in tirupur

பள்ளிகளில் மதமாற்றங்களை தடுக்க விதிகளை வகுக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

mhc-accept-forcible-religious-conversion-petition
mhc-accept-forcible-religious-conversion-petition
author img

By

Published : May 6, 2022, 5:58 PM IST

கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும், இதனை தடுக்க விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி அடங்கிய அமர்வில் நேற்று (மே 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடந்ததாக புகார்கள் கிடையாது. இதுகுறித்து புகார்கள் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று (மே 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய விசாரணையில், தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான். இதற்கு நான்கு வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.ட

இதையும் படிங்க: பள்ளி மாணவி தற்கொலை - கட்டாய மதமாற்றம் காரணமா?

கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும், இதனை தடுக்க விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி அடங்கிய அமர்வில் நேற்று (மே 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடந்ததாக புகார்கள் கிடையாது. இதுகுறித்து புகார்கள் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று (மே 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய விசாரணையில், தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான். இதற்கு நான்கு வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.ட

இதையும் படிங்க: பள்ளி மாணவி தற்கொலை - கட்டாய மதமாற்றம் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.