ETV Bharat / city

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவு நீக்கம்!

author img

By

Published : Sep 18, 2020, 4:28 PM IST

Updated : Sep 18, 2020, 6:11 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

16:25 September 18

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற தனது உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்க கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது. 

அந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய கூடாது என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று(செப்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது, அதில் கால நீட்டிப்பு கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதீமன்றம் நிராகரித்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற தனது உத்தரவை நீக்கி உத்தரவிட்டார். 

மேலும், மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு, செப்டம்பர் 25ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கினார். 

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் நீட் தேர்வில் தங்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிப்பதற்காக வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு: மாநில அரசு முடிவெடுக்கலாம்!

16:25 September 18

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற தனது உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்க கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது. 

அந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய கூடாது என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று(செப்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது, அதில் கால நீட்டிப்பு கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதீமன்றம் நிராகரித்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற தனது உத்தரவை நீக்கி உத்தரவிட்டார். 

மேலும், மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு, செப்டம்பர் 25ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கினார். 

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் நீட் தேர்வில் தங்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிப்பதற்காக வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு: மாநில அரசு முடிவெடுக்கலாம்!

Last Updated : Sep 18, 2020, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.