சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
- பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்
- சலூன், ஜிம் உள்ளிட்ட இடங்களில் கரோனா வழிமுறையை பின்பற்றாவிட்டால், ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும்
- பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால், ரூ. 500 அபராதம்
- குறைந்தது 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
- கடைகள், வணிக வளாகம், அலுவலக முகப்புவாயிலில் கண்டிப்பாக கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்
- அனைத்து பணியாளர்களுக்கும் கபசுரகுடிநீர், நிலவேம்பு குடிநீர், மல்ட்டி விட்டமின் மாத்திரைகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும்
- கடை, நிறுவனம், அலுவலகப் பணியிடங்களில் Fingertip Pulse Oximeter கருவி வைத்திருக்க வேண்டும்
- பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறை போன்றவற்றை உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
- தொடர்ந்து. இரு முறைக்கு மேல் விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும்
- நாள்தோறும் ரூ. 10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.