ETV Bharat / city

'மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது'

author img

By

Published : Sep 27, 2021, 4:07 PM IST

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

சென்னை: இது குறித்து அவர் பேசுகையில், "பள்ளிக்கு மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலமாக வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.

கரோனா காலகட்டத்தில் அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்துவருவதாகப் பள்ளிக் கல்வித் துறைக்குத் தொடர்ந்து தகவல் வருகிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவர்களின் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம். அதோபோல மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என எந்தத் தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சென்னை: இது குறித்து அவர் பேசுகையில், "பள்ளிக்கு மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலமாக வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.

கரோனா காலகட்டத்தில் அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்துவருவதாகப் பள்ளிக் கல்வித் துறைக்குத் தொடர்ந்து தகவல் வருகிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவர்களின் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம். அதோபோல மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என எந்தத் தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.