ETV Bharat / city

முறுக்குப் பிழியும் கருவியில் தங்கக் கட்டிகள்: சென்னையில் கடத்தல் ஆசாமி கைது

author img

By

Published : Oct 2, 2019, 10:05 AM IST

சென்னை: சவூதி அரேபியாவிலிருந்து சென்னைக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை முறுக்குப் பிழியும் கருவிக்குள் வைத்து கடத்தி வந்த இளைஞரை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சவூதி அரேபியாவில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சுங்கத் துறையினர் அவரிடம் விசாரித்தனர்.

gold smuggling
கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள்

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சதாமின் உடமைகளை சோதனைசெய்தனர். அவர் வைத்திருந்த பையில் முறுக்கு தயாரிக்கும் கருவி இருந்ததுள்ளது. அதனை சுங்கத் துறை அலுவலர்கள் பிரித்து பார்த்தபோது, அதற்குள் ஆறு தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், 21 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 555 கிராம் தங்கத்தை பறிமுதல்செய்தனர். மேலும் ஆந்திர இளைஞர் சதாம் உசேனை கைது செய்த சுங்கத் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: குருவியாகச் செயல்பட்டவரையே கடத்தி மிரட்டிய தங்கக் கடத்தல் மன்னன்கள் கைது!

சென்னை விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சவூதி அரேபியாவில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சுங்கத் துறையினர் அவரிடம் விசாரித்தனர்.

gold smuggling
கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள்

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சதாமின் உடமைகளை சோதனைசெய்தனர். அவர் வைத்திருந்த பையில் முறுக்கு தயாரிக்கும் கருவி இருந்ததுள்ளது. அதனை சுங்கத் துறை அலுவலர்கள் பிரித்து பார்த்தபோது, அதற்குள் ஆறு தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், 21 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 555 கிராம் தங்கத்தை பறிமுதல்செய்தனர். மேலும் ஆந்திர இளைஞர் சதாம் உசேனை கைது செய்த சுங்கத் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: குருவியாகச் செயல்பட்டவரையே கடத்தி மிரட்டிய தங்கக் கடத்தல் மன்னன்கள் கைது!

Intro:சவூதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ஆந்திர வாலிபர் கைதுBody:சவூதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ஆந்திர வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது சவூதி அரேபியாவில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திராவை சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவர் வந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது முறுக்கு தயாரிக்கும் கருவி இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் 6 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 21 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள 555 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஆந்திர வாலிபர் சதாம் உசேனை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.