ETV Bharat / city

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

author img

By

Published : Nov 8, 2021, 9:47 AM IST

அபுதாபியிலிருந்து விமான மூலம் கடத்தி வரப்பட்ட 90.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தைச் சென்னை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

சென்னை: அபுதாபியிலிருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று (நவ.07) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது விமானத்தில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். இதனால், சந்தேகமடைந்த சுங்கத்துறை அலுவலர்கள் அவரிடம் இருந்த சூட்கேஸை சோதனை செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

அதில், தங்கத்தினால் ஆன தங்க ஒயர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2.06 கிலோ எடை கொண்ட, 90.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒயர்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்த அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி கணக்கை ஹேக் செய்த சொந்த கட்சி நிர்வாகி கைது!

சென்னை: அபுதாபியிலிருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று (நவ.07) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது விமானத்தில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். இதனால், சந்தேகமடைந்த சுங்கத்துறை அலுவலர்கள் அவரிடம் இருந்த சூட்கேஸை சோதனை செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

அதில், தங்கத்தினால் ஆன தங்க ஒயர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2.06 கிலோ எடை கொண்ட, 90.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒயர்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்த அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி கணக்கை ஹேக் செய்த சொந்த கட்சி நிர்வாகி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.