ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM

author img

By

Published : Nov 25, 2021, 5:05 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

1.ஒடிசாவில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு!

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் 53 பேர் மற்றும் 31 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

2.'அவர்களைச் சக மனிதராகப் பாருங்கள்!' - பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

பன்னாட்டு அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

3.சேலம் சிலிண்டர் வெடிப்பு விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

சேலத்தில் சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

4.அண்ணா பிறந்த நாள்; 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - வெளியானது அரசாணை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

5.1000 ஆண்களுக்கு 878 பெண்கள்... தமிழ்நாட்டில் குறைந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்: மருத்துவர் ராமதாஸ்

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த அரசு சிறப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

6.ஓடிடியில் 'அண்ணாத்த' - விதிமுறையை காற்றில் பறக்கவிட்ட சன் பிக்சர்ஸ்

'அண்ணாத்த' திரைப்படம் வெளியான 20 நாள்களில் ஓடிடி (Annaatthe in ott) தளங்களில் வெளியாகியுள்ளது.

7.'நவ. 29இல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்'

தெற்கு அந்தமானில் வருகின்ற 29ஆம் தேதி புதியதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாகவும், வங்கக் கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8.கரோனா கால மருத்துவர்கள், பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு அரசிற்கு டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

9.ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை மக்களுக்கு வழங்கிய ஸ்டாலின்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

10.BB Day 53 - எல்லைமீறிய சண்டை... பொருள்களை உடைத்த அக்ஷரா

பிக்பாஸ் நேற்றைய (நவம்பர் 24) நிகழ்ச்சி முழுவதும் அக்ஷரா, சிபியின் சண்டை மட்டுமே இருந்ததால், பார்வையாளர்கள் சற்று கடுப்பானார்கள் என்றே சொல்லாம்.

1.ஒடிசாவில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு!

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் 53 பேர் மற்றும் 31 மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

2.'அவர்களைச் சக மனிதராகப் பாருங்கள்!' - பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

பன்னாட்டு அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

3.சேலம் சிலிண்டர் வெடிப்பு விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

சேலத்தில் சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

4.அண்ணா பிறந்த நாள்; 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - வெளியானது அரசாணை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

5.1000 ஆண்களுக்கு 878 பெண்கள்... தமிழ்நாட்டில் குறைந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்: மருத்துவர் ராமதாஸ்

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த அரசு சிறப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

6.ஓடிடியில் 'அண்ணாத்த' - விதிமுறையை காற்றில் பறக்கவிட்ட சன் பிக்சர்ஸ்

'அண்ணாத்த' திரைப்படம் வெளியான 20 நாள்களில் ஓடிடி (Annaatthe in ott) தளங்களில் வெளியாகியுள்ளது.

7.'நவ. 29இல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்'

தெற்கு அந்தமானில் வருகின்ற 29ஆம் தேதி புதியதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாகவும், வங்கக் கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8.கரோனா கால மருத்துவர்கள், பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு அரசிற்கு டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

9.ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை மக்களுக்கு வழங்கிய ஸ்டாலின்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

10.BB Day 53 - எல்லைமீறிய சண்டை... பொருள்களை உடைத்த அக்ஷரா

பிக்பாஸ் நேற்றைய (நவம்பர் 24) நிகழ்ச்சி முழுவதும் அக்ஷரா, சிபியின் சண்டை மட்டுமே இருந்ததால், பார்வையாளர்கள் சற்று கடுப்பானார்கள் என்றே சொல்லாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.